ஆழியாறு அணையில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்களுக்கு மீட்பு ஒத்திகை பயிற்சி

பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணையில் மத்திய ரிசர்வ் படை குழுவினருக்கு ஒருநாள் பேரிடர் ஒத்திகை பயிற்சி நடைபெற்றது. சுமார் 100-வீரர்கள் ஒத்திகை பயிற்சி மேற்கொண்டனர்.


கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணையில் மத்திய ரிசர்வ் படை குழுவினருக்கு ஒருநாள் பேரிடர் ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.

கோவை-மேட்டுப்பாளையம் ரோடு தொப்பம்பட்டியில், மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்களுக்கான பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது.

இங்குள்ள வீரர்களுக்கு பேரிடர் மீட்பு பயிற்சிகள் மற்றும் ஒத்திகை பயிற்சிகள் அவ்வப்போது அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணையில் மத்திய ரிசர்வ் படை குழுவினருக்கு ஒருநாள் பேரிடர் ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.

பயிற்சி மையத்தின் முதல்வர் சதீஷ் சங்கர் வர்மா தலைமையில் நடைபெற்ற இந்த பயிற்சி முகாமில், கமாண்டோ ஹரிகுமார் மற்றும் இன்ஸ்பெக்டர் சுனில்குமார் முன்னிலையில், சுமார் 100 வீரர்கள் ஒத்திகை பயிற்சி மேற்கொண்டனர்.

இதில் 11 பயிற்சியாளர்கள் கலந்துகொண்டு வீரர்களுக்குப் பயிற்சி அளித்தனர். பேரிடர் காலங்களில் ஏற்படும் வெள்ளம், பூகம்பம் போன்ற இயற்கை சீற்றங்கள் நடைபெறும்போது, அதில் சிக்கிய பொது மக்களை எவ்வாறு மீட்பது, தண்ணீரில் நீந்திச் சென்று எவ்வாறு கயிறு கட்டி மக்களை மீட்பது போன்ற ஒத்திகை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

Newsletter

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...