நீலகிரி மாவட்டம் குன்னூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பர்லியார் சாலையில் மரப்பாலம் அருகே பெங்களூரிலிருந்து குன்னூர் வந்துகொண்டிருந்த டஸ்டர் வாகனம் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதில், உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பர்லியார் சாலையில் மரப்பாலம் அருகே பெங்களூரிலிருந்து குன்னூர் வந்துகொண்டிருந்த டஸ்டர் வாகனம் திடீரென தீப்பற்றி எரிந்தது. நல்வாய்ப்பாக காரில் பயணித்தவர்கள் உடனடியாக தப்பி ஓடியதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
பெங்களூருவிலிருந்து குன்னூர் நோக்கி வந்து கொண்டிருந்த டஸ்டர் வாகனத்தை குன்னூர் டிடிகே சாலைப் பகுதியில், வசித்து வரும் தர்மராஜ் என்பவர் ஓட்டி வந்தார். தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையில், மரப்பாலம் அருகே வந்து கொண்டிருந்த போது வாகனத்திலிருந்து திடீரென புகை வந்துள்ளது.
உடனடியாக வாகனத்தைச் சாலை ஓரம் நிறுத்திவிட்டு தனது மனைவி குழந்தைகளுடன் உடனடியாக கீழே இறங்கி ஓடினார்.

சிறிது நேரத்தில் வாகனம் திபுதிபுவென எரியத் துவங்கியது.

சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல் துறையினர் போக்குவரத்தை நிறுத்தி தீயிணை அணைத்தனர்.

அதற்குள் தீ முழுவதுமாக எரிந்து கார் முற்றிலும் சேதமடைந்தது.

இதன் காரணமாக குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பெங்களூருவிலிருந்து குன்னூர் நோக்கி வந்து கொண்டிருந்த டஸ்டர் வாகனத்தை குன்னூர் டிடிகே சாலைப் பகுதியில், வசித்து வரும் தர்மராஜ் என்பவர் ஓட்டி வந்தார். தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையில், மரப்பாலம் அருகே வந்து கொண்டிருந்த போது வாகனத்திலிருந்து திடீரென புகை வந்துள்ளது.
உடனடியாக வாகனத்தைச் சாலை ஓரம் நிறுத்திவிட்டு தனது மனைவி குழந்தைகளுடன் உடனடியாக கீழே இறங்கி ஓடினார்.
சிறிது நேரத்தில் வாகனம் திபுதிபுவென எரியத் துவங்கியது.
சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல் துறையினர் போக்குவரத்தை நிறுத்தி தீயிணை அணைத்தனர்.
அதற்குள் தீ முழுவதுமாக எரிந்து கார் முற்றிலும் சேதமடைந்தது.
இதன் காரணமாக குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.