குன்னூரில் திடீரென தீப்பற்றி எரிந்த வாகனம்

நீலகிரி மாவட்டம் குன்னூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பர்லியார் சாலையில் மரப்பாலம் அருகே பெங்களூரிலிருந்து குன்னூர் வந்துகொண்டிருந்த டஸ்டர் வாகனம் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதில், உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.


நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பர்லியார் சாலையில் மரப்பாலம் அருகே பெங்களூரிலிருந்து குன்னூர் வந்துகொண்டிருந்த டஸ்டர் வாகனம் திடீரென தீப்பற்றி எரிந்தது. நல்வாய்ப்பாக காரில் பயணித்தவர்கள் உடனடியாக தப்பி ஓடியதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

பெங்களூருவிலிருந்து குன்னூர் நோக்கி வந்து கொண்டிருந்த டஸ்டர் வாகனத்தை குன்னூர் டிடிகே சாலைப் பகுதியில், வசித்து வரும் தர்மராஜ் என்பவர் ஓட்டி வந்தார். தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையில், மரப்பாலம் அருகே வந்து கொண்டிருந்த போது வாகனத்திலிருந்து திடீரென புகை வந்துள்ளது.

உடனடியாக வாகனத்தைச் சாலை ஓரம் நிறுத்திவிட்டு தனது மனைவி குழந்தைகளுடன் உடனடியாக கீழே இறங்கி ஓடினார்.



சிறிது நேரத்தில் வாகனம் திபுதிபுவென எரியத் துவங்கியது.



சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல் துறையினர் போக்குவரத்தை நிறுத்தி தீயிணை அணைத்தனர்.



அதற்குள் தீ முழுவதுமாக எரிந்து கார் முற்றிலும் சேதமடைந்தது.



இதன் காரணமாக குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...