விவசாய மின் இணைப்பு கோரி விண்ணப்பித்த விவசாயிகளுக்குத் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் முதல்வரின் உத்தரவுப்படி விரைந்து மின் இணைப்புகளை வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை: விவசாய மின் இணைப்பு கோரி விண்ணப்பித்த விவசாயிகளுக்குத் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் முதல்வரின் உத்தரவுப்படி விரைந்து மின் இணைப்புகளை வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் மாநில பொதுச்செயலாளர் கந்தசாமி கூறியிருப்பதாவது:-
தமிழகம் முழுவதும் விவசாயிகள் விவசாய மின் இணைப்பு கோரி விண்ணப்பித்துக் கடந்த 20 ஆண்டுகளாகக் காத்திருக்கின்றனர். தற்போது சாதாரண வரிசையில் விண்ணப்பித்த விவசாயிகளுக்கு 2013-ம் ஆண்டு வரை நிலுவையில் உள்ள விண்ணப்பங்களுக்கு மின் இணைப்பு வழங்கத் தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், சுயநிதி மின் திட்டத்தின் கீழ் நிலுவையில் விண்ணப்பங்களில் 2018-ம் ஆண்டு வரை நிலுவையில் உள்ள விண்ணப்பங்களுக்கு மின் இணைப்பு வழங்க உத்தரவிட்டுள்ளார். சுய நிதி திட்டத்தில் கடந்த 2010-ம் ஆண்டு வரை விண்ணப்பித்த விவசாயிகள் விண்ணப்பம் கொடுக்கும் போது இருந்த ஆழ்துளை குழாய்க் கிணற்றில் தற்போது தண்ணீர் இல்லை.
அதே விவசாயிகளின் பெயரில் வேறு சர்வே எண்ணில் உள்ள குழாய்க் கிணற்றுக்கு மின் இணைப்பு தருவதற்கு மின்வாரியம் மறுக்கிறது. தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணைய உத்தரவின்படி சாதாரண வரிசையில் பதிவு செய்த விவசாயிகளுக்கு மட்டும் சர்வே எண் மாற்றம் செய்யப்பட்டு மின் இணைப்பு வழங்க வழிவகை உள்ளது. இதே போல் சுய நிதி திட்டத்திற்கும் வழங்க வேண்டும். விரைவாக வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் மாநில பொதுச்செயலாளர் கந்தசாமி கூறியிருப்பதாவது:-
தமிழகம் முழுவதும் விவசாயிகள் விவசாய மின் இணைப்பு கோரி விண்ணப்பித்துக் கடந்த 20 ஆண்டுகளாகக் காத்திருக்கின்றனர். தற்போது சாதாரண வரிசையில் விண்ணப்பித்த விவசாயிகளுக்கு 2013-ம் ஆண்டு வரை நிலுவையில் உள்ள விண்ணப்பங்களுக்கு மின் இணைப்பு வழங்கத் தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், சுயநிதி மின் திட்டத்தின் கீழ் நிலுவையில் விண்ணப்பங்களில் 2018-ம் ஆண்டு வரை நிலுவையில் உள்ள விண்ணப்பங்களுக்கு மின் இணைப்பு வழங்க உத்தரவிட்டுள்ளார். சுய நிதி திட்டத்தில் கடந்த 2010-ம் ஆண்டு வரை விண்ணப்பித்த விவசாயிகள் விண்ணப்பம் கொடுக்கும் போது இருந்த ஆழ்துளை குழாய்க் கிணற்றில் தற்போது தண்ணீர் இல்லை.
அதே விவசாயிகளின் பெயரில் வேறு சர்வே எண்ணில் உள்ள குழாய்க் கிணற்றுக்கு மின் இணைப்பு தருவதற்கு மின்வாரியம் மறுக்கிறது. தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணைய உத்தரவின்படி சாதாரண வரிசையில் பதிவு செய்த விவசாயிகளுக்கு மட்டும் சர்வே எண் மாற்றம் செய்யப்பட்டு மின் இணைப்பு வழங்க வழிவகை உள்ளது. இதே போல் சுய நிதி திட்டத்திற்கும் வழங்க வேண்டும். விரைவாக வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.