முதல்வரின் உத்தரவுப்படி விவசாயிகளுக்கு விரைந்து மின் இணைப்புகள் வழங்க கோரிக்கை

விவசாய மின் இணைப்பு கோரி விண்ணப்பித்த விவசாயிகளுக்குத் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் முதல்வரின் உத்தரவுப்படி விரைந்து மின் இணைப்புகளை வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: விவசாய மின் இணைப்பு கோரி விண்ணப்பித்த விவசாயிகளுக்குத் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் முதல்வரின் உத்தரவுப்படி விரைந்து மின் இணைப்புகளை வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் மாநில பொதுச்செயலாளர் கந்தசாமி கூறியிருப்பதாவது:-

தமிழகம் முழுவதும் விவசாயிகள் விவசாய மின் இணைப்பு கோரி விண்ணப்பித்துக் கடந்த 20 ஆண்டுகளாகக் காத்திருக்கின்றனர். தற்போது சாதாரண வரிசையில் விண்ணப்பித்த விவசாயிகளுக்கு 2013-ம் ஆண்டு வரை நிலுவையில் உள்ள விண்ணப்பங்களுக்கு மின் இணைப்பு வழங்கத் தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், சுயநிதி மின் திட்டத்தின் கீழ் நிலுவையில் விண்ணப்பங்களில் 2018-ம் ஆண்டு வரை நிலுவையில் உள்ள விண்ணப்பங்களுக்கு மின் இணைப்பு வழங்க உத்தரவிட்டுள்ளார். சுய நிதி திட்டத்தில் கடந்த 2010-ம் ஆண்டு வரை விண்ணப்பித்த விவசாயிகள் விண்ணப்பம் கொடுக்கும் போது இருந்த ஆழ்துளை குழாய்க் கிணற்றில் தற்போது தண்ணீர் இல்லை.

அதே விவசாயிகளின் பெயரில் வேறு சர்வே எண்ணில் உள்ள குழாய்க் கிணற்றுக்கு மின் இணைப்பு தருவதற்கு மின்வாரியம் மறுக்கிறது. தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணைய உத்தரவின்படி சாதாரண வரிசையில் பதிவு செய்த விவசாயிகளுக்கு மட்டும் சர்வே எண் மாற்றம் செய்யப்பட்டு மின் இணைப்பு வழங்க வழிவகை உள்ளது. இதே போல் சுய நிதி திட்டத்திற்கும் வழங்க வேண்டும். விரைவாக வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...