ஜல்லிக்கட்டு போட்டி: அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்

கோவையில் ஜல்லிக்கட்டு அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியான பின்னர் தான் முடிவு செய்ய முடியும் என அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார்.



கோவை: கோவையில் ஜல்லிக்கட்டு அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியான பின்னர் தான் முடிவு செய்ய முடியும் என அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார்.

தமிழக அரசின் நியாய விலை கடைகளில் பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டதைத் தொடர்ந்து தமிழகத்தில் பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.



இந்நிலையில், கோவையில் திட்டத்தை அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார்.



முதலில் சோமனூர் துவக்கியதைத் தொடர்ந்து சூலூர் மற்றும் ராமநாதபுரத்தில் இத்திட்டத்தைத் துவக்கி வைத்தார்.



இராமநாதபுரத்தில், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், வருகின்ற 10-ம் தேதிக்குள் 10.78-லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படும். இதன் மதிப்பு 58.02-கோடி, உயர் அழுத்த மின் கோபுரம் அமைக்கும் விவகாரத்தில் விவசாயிகள் பொதுவான கோரிக்கைகள் மட்டுமே வழங்கியுள்ளனர்‌.



யார் யாருக்கு இழப்பீட்டுத் தொகை வரவில்லையோ அவர்களுக்கு விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கனவே இழப்பீடு தொகை பெற்றவர்கள் அதிகப்படியாக தற்போது வழங்கக் கோரியுள்ளனர்‌.

கூடுதல் இழப்பீடு வேண்டுமென்றால் நீதிமன்றத்தை நாடுவது தான் வாடிக்கை சில அமைப்புகள் கூடுதல் இழப்பீடு பெற்றுத்தருவதாகத் தவறாக வழிகாட்டுகின்றனர். யாருக்கு இழப்பீடு விடுபட்டுள்ளது என்பது தொடர்பான பட்டியலை இதுவரை விவசாயிகள் வழங்கவில்லை, கிரைண்டர் உற்பத்தி செய்யும் அமைப்பினரின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த ஆரம்பக் கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தில் எத்தனை பேர் கரூர் மாவட்டத்திலிருந்து பார் டெண்டர் விண்ணப்பித்துள்ளார்கள் என கேட்டுவிட்டு பின்னர் என்னிடம் கேள்வி எழுப்பினால் பதில் அளிக்கிறேன். கடந்தாண்டு மொத்தமுள்ள 5-ஆயிரம் கடைகளுக்கு 6400- படிவங்கள் வழங்கப்பட்டது.

இவ்வாண்டு 11- ஆயிரம் படிவங்கள் வழங்கப்பட்டு முறையாக டெண்டர் நடைபெற்றது. குறைவாகத் தொகை பரிந்துரைத்தவர்களுக்குக் கிடைக்கவில்லை என்ற வருத்தம் இருக்கும், கடந்த ஆட்சியில் 1500- கடைகளுக்கு டெண்டர் விடாமல் முறைகேடாகச் செயல்பட்டு வந்துள்ளது.

விண்ணப்பப் படிவம் கிடைக்கவில்லை என யாராவது புகார் சொன்னார்களா? படிவத்தைப் பெற்றுக் கொள்ளவில்லை என யாராவது சொன்னார்களா எனக் கேட்ட அவர், டெண்டர் திறக்கும் போது யாரும் எதுவும் பேசவில்லை. 10- ஆண்டுகள் என்பதற்காக, அரசின் நிபந்தனையைத் தளர்த்த முடியாது.

312- கோடி வருமானம் கிடைத்த இடத்தில் கடந்த ஆண்டு 89- கோடி மட்டுமே வருமானம் கிடைத்தது, 1551- கடைகளுக்கு டெண்டர் இன்றி பார் நடைபெற்றுள்ளது. அதிக விலைக்கு விற்பனை செய்த 134- பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கோவை ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு எல்லோருக்கும் டோக்கன் வழங்கினால் ஜல்லிக்கட்டை 2, 3 நாட்கள் நடத்த வேண்டி இருக்கும். ஜல்லிக்கட்டு நடக்குமா என்பதை அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியான பின்னர் தான் முடிவு செய்ய முடியும் என தெரிவித்தார்.

Newsletter

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...