கிணத்துக்கடவு தாலுகா பகுதியிலுள்ள 70-ரேஷன் கடைகளில் 33-ஆயிரத்து 587-அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்குப் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்றது.
கோவை: கிணத்துக்கடவு தாலுகா பகுதியிலுள்ள 70-ரேஷன் கடைகளில் 33-ஆயிரத்து 587-அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்குப் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்றது.
தமிழகத்தில் உள்ள மக்கள் பொங்கல் பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில் தமிழக அரசு சார்பில் 21-பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியைச் சென்னையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
அதன்படி கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகா பகுதியிலுள்ள 70-ரேஷன் கடைகளில் 33- ஆயிரத்து 587-அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்குப் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்றது.
வடபுதூர் ஊராட்சியில் உள்ள ரேஷன் கடையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியை கிணத்துக்கடவு மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் முகமதுயாசின், கோவை மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் ராஜன் ஆகியோர் கலந்துகொண்டு தொடங்கி வைத்தனர்.

இதில் வடபுதூர் ஊராட்சி மன்ற தலைவர் அபின்யா அசோக்குமார், கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் ராமசாமி, கிளைச் செயலாளர் பத்தராயன், திமுக மாணவர் அணி நிர்வாகி பிரபு, இளைஞரணி நிர்வாகி விவேக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதேபோல், சொலவம் பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட சிக்கலம்பாளையம் நியாய விலை கடையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி நடைபெற்றது. இதில் ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமார் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு வழங்கி தொடங்கி வைத்தார்.

இதேபோல், நெ.10-முத்தூரில் உள்ள ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்குப் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியும் தீவிரமாக நடைபெற்றது.
தமிழகத்தில் உள்ள மக்கள் பொங்கல் பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில் தமிழக அரசு சார்பில் 21-பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியைச் சென்னையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
அதன்படி கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகா பகுதியிலுள்ள 70-ரேஷன் கடைகளில் 33- ஆயிரத்து 587-அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்குப் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்றது.
வடபுதூர் ஊராட்சியில் உள்ள ரேஷன் கடையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியை கிணத்துக்கடவு மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் முகமதுயாசின், கோவை மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் ராஜன் ஆகியோர் கலந்துகொண்டு தொடங்கி வைத்தனர்.
இதில் வடபுதூர் ஊராட்சி மன்ற தலைவர் அபின்யா அசோக்குமார், கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் ராமசாமி, கிளைச் செயலாளர் பத்தராயன், திமுக மாணவர் அணி நிர்வாகி பிரபு, இளைஞரணி நிர்வாகி விவேக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதேபோல், சொலவம் பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட சிக்கலம்பாளையம் நியாய விலை கடையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி நடைபெற்றது. இதில் ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமார் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு வழங்கி தொடங்கி வைத்தார்.
இதேபோல், நெ.10-முத்தூரில் உள்ள ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்குப் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியும் தீவிரமாக நடைபெற்றது.