கோவையில் 14 -வயது மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த சம்பவம் தொடர்பாக கட்டிடத் தொழிலாளி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
கோவை: கோவையில் 14 -வயது மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த சம்பவம் தொடர்பாக கட்டிடத் தொழிலாளி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
கோவை சரவணம்பட்டியை அடுத்த சிவானந்த புரத்தைச் சேர்ந்தவர் 14 வயது மாணவி. இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
இவர் கடந்த மாதம் 13-ந்தேதி திடீரென மாயமானார். கோவை கிழக்குப் பகுதி மகளிர் போலீசார் வழக்குப்பதிந்து மாணவியைத் தேடி வந்தனர். ஆனால் மாணவி கொலை செய்யப்பட்டு சரவணம்பட்டி யமுனா நகர்ப் பகுதியில் சாக்கு மூட்டையில் கட்டி வீசப்பட்டு இருந்தார்.
போலீசார் நடத்திய விசாரணையில் மாணவியை அதே பகுதியைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளியான முத்துக்குமார் (44) என்பவர் பலாத்காரம் செய்து கொன்றது தெரியவந்தது.
முத்துக்குமார், கொல்லப்பட்ட மாணவியின் தாயாருடைய நண்பர் ஆவார். முத்துக்குமாருக்கும், மாணவியின் தாயாருக்கும் இடையே நகை கொடுக்கல், வாங்கல் தொடர்பாகத் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராற்றில் மாணவியை முத்துக்குமார் கடத்திச் சென்று கொலை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து முத்துக்குமாரை போலீசார் கைது செய்தனர். கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் கோவை மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்தார்.
இந்தநிலையில் முத்துக்குமாரை குண்டர் சட்டத்தில் அடைக்க போலீசார் பரிந்துரை செய்தனர். அதன்பேரில் இன்று முத்துக்குமார் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
கோவை சரவணம்பட்டியை அடுத்த சிவானந்த புரத்தைச் சேர்ந்தவர் 14 வயது மாணவி. இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
இவர் கடந்த மாதம் 13-ந்தேதி திடீரென மாயமானார். கோவை கிழக்குப் பகுதி மகளிர் போலீசார் வழக்குப்பதிந்து மாணவியைத் தேடி வந்தனர். ஆனால் மாணவி கொலை செய்யப்பட்டு சரவணம்பட்டி யமுனா நகர்ப் பகுதியில் சாக்கு மூட்டையில் கட்டி வீசப்பட்டு இருந்தார்.
போலீசார் நடத்திய விசாரணையில் மாணவியை அதே பகுதியைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளியான முத்துக்குமார் (44) என்பவர் பலாத்காரம் செய்து கொன்றது தெரியவந்தது.
முத்துக்குமார், கொல்லப்பட்ட மாணவியின் தாயாருடைய நண்பர் ஆவார். முத்துக்குமாருக்கும், மாணவியின் தாயாருக்கும் இடையே நகை கொடுக்கல், வாங்கல் தொடர்பாகத் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராற்றில் மாணவியை முத்துக்குமார் கடத்திச் சென்று கொலை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து முத்துக்குமாரை போலீசார் கைது செய்தனர். கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் கோவை மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்தார்.
இந்தநிலையில் முத்துக்குமாரை குண்டர் சட்டத்தில் அடைக்க போலீசார் பரிந்துரை செய்தனர். அதன்பேரில் இன்று முத்துக்குமார் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.