கோவையில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த நபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவையில் 14 -வயது மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த சம்பவம் தொடர்பாக கட்டிடத் தொழிலாளி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.


கோவை: கோவையில் 14 -வயது மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த சம்பவம் தொடர்பாக கட்டிடத் தொழிலாளி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

கோவை சரவணம்பட்டியை அடுத்த சிவானந்த புரத்தைச் சேர்ந்தவர் 14 வயது மாணவி. இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

இவர் கடந்த மாதம் 13-ந்தேதி திடீரென மாயமானார். கோவை கிழக்குப் பகுதி மகளிர் போலீசார் வழக்குப்பதிந்து மாணவியைத் தேடி வந்தனர். ஆனால் மாணவி கொலை செய்யப்பட்டு சரவணம்பட்டி யமுனா நகர்ப் பகுதியில் சாக்கு மூட்டையில் கட்டி வீசப்பட்டு இருந்தார்.

போலீசார் நடத்திய விசாரணையில் மாணவியை அதே பகுதியைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளியான முத்துக்குமார் (44) என்பவர் பலாத்காரம் செய்து கொன்றது தெரியவந்தது.

முத்துக்குமார், கொல்லப்பட்ட மாணவியின் தாயாருடைய நண்பர் ஆவார். முத்துக்குமாருக்கும், மாணவியின் தாயாருக்கும் இடையே நகை கொடுக்கல், வாங்கல் தொடர்பாகத் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராற்றில் மாணவியை முத்துக்குமார் கடத்திச் சென்று கொலை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து முத்துக்குமாரை போலீசார் கைது செய்தனர். கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் கோவை மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்தார்.

இந்தநிலையில் முத்துக்குமாரை குண்டர் சட்டத்தில் அடைக்க போலீசார் பரிந்துரை செய்தனர். அதன்பேரில் இன்று முத்துக்குமார் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

Newsletter

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...

கோவை-அவிநாசி சாலையில் புதிய போக்குவரத்து சிக்னல்கள்: இன்று சோதனை ஓட்டம் தொடக்கம்

கோவை-அவிநாசி சாலையில் ESSO Bank மற்றும் Pioneer Mill சந்திப்புகளில் அமைக்கப்பட்ட புதிய தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள்...

கோவையில் மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 4782 வழக்குகளுக்கு தீர்வு, ரூ.1.11 கோடி இழப்பீடு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4782 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் உயிரிழந்த இரு கு...

கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-இல் அறிவிப்பு

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-ஆம் தேதி புதன்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில...

கோவையில் ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுக்க அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்டத்தி...