கோவை மார்க்கெட்டில் தொழிலாளி அடித்து கொலை

கோவை தியாகி குமரன் மார்க்கெட்டில் தொழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து பெரியக்கடை வீதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


கோவை: கோவை தியாகி குமரன் மார்க்கெட்டில் தொழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கோவை கரும்புக்கடை அருகே உள்ள சாரமேட்டை சேர்ந்தவர் யூசுப் (வயது 54). இவர் பெரியக்கடை வீதி அருகே உள்ள தியாகி குமரன்மார்க்கெட்டில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருடன் கேரளமாநில காசர் கோட்டை சேர்ந்த நாசர் (47) என்பவரும் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு யூசூப், நாசரிடம் பணம் வாங்கியதாகக் கூறப்படுகிறது. இது குறித்து அவர் பலமுறை யூசூப்பிடம் கேட்டு உள்ளார். ஆனால் அவர் பணத்தைத் திருப்பி கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தார். நேற்று இரவு 11 -மணியளவில் 2- பேரும் மார்க்கெட்டில் வைத்து மது குடித்தனர். போதை தலைக்கேறி நிலையில் 2 -பேருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கலில் வாய் தகராறு ஏற்பட்டது.

பின்னர் இது கைகலப்பாக மாறியது. ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதில் ஆத்திரம் அடைந்த 2 -பேரும் அங்குக் கிடந்த உருட்டுக் கட்டையால் மாறி மாறி தாக்கினர். இதில் 2 பேருக்கும் தலையில் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தனர். நள்ளிரவு 2 மணியளவில் அந்த வழியாகச் சென்றவர்கள் 2 பேரும் ரத்த வெள்ளத்தில் மயங்கிக் கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் 2 பேரையும் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திக்கு அனுப்பி வைத்தனர். அங்கு 2 பேரையும் டாக்டர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் யூசுப் பரிதாபமாக இறந்தார். நாசர் கவலைக்கிடமான நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து பெரியக்கடை வீதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தியாகி குமரன் மார்க்கெட்டில் நள்ளிரவு தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Newsletter

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...