பள்ளி சிறுவர்-சிறுமியர்கள் வீடு வீடாகச் சென்று குழந்தைகள் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாவது குறித்து நோட்டீஸ் வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
கோவை: பள்ளிச் சிறுவர்-சிறுமியர்கள் வீடு வீடாகச் சென்று குழந்தைகள் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாவது குறித்து நோட்டீஸ் வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
கொரோனா ஊரடங்கில் ஆன்லைன் வகுப்புகளுக்காகக் குழந்தைகள் ஸ்மார்ட்போன்கள் மூலம் பயின்று வந்தனர். படிப்பிற்காக செல்போன்கள் உபயோகித்த போதிலும் பல குழந்தைகள் செல்போன் விளையாட்டுகளில் மூழ்கினர்.
கொரோனா ஊரடங்கு முடிந்து, பள்ளிகள் திறக்கப்பட்ட போதிலும் பல குழந்தைகளிடையே அந்தப் பழக்கம் தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில் குழந்தைகள் ஆன்லைன் விளையாட்டுகளில் மூழ்குவதைத் தடுக்கும் வகையில், கோவை குரும்பபாளையம் ஜே.ஜே நகர் பகுதியில் வசித்து வரும் பிரணவ், பவன், கணேஷ் பாலா, அமுத ஸ்ரீ, கிரிஷிகா, சஞ்சய் ராம் வேல், ரித்தீஷ், சஷ்டிக், பத்மேஷ் பாலா ஆகிய 9-பள்ளி சிறுவர்-சிறுமியர்கள் இணைந்து தங்களது பகுதியில் வீடு வீடாகச் சென்று ஆன்லைன் விளையாட்டுகள் மூலம் ஏற்படும் தீமைகள் குறித்து நோட்டீஸ் வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
சிறுவர் சிறுமியரின் இந்தச் செயல் அப்பகுதியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் குழந்தைகள் மூலம் இந்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். இதுவரை 100-வீடுகளில் இந்த நோட்டீஸ் வழங்கி உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா ஊரடங்கில் ஆன்லைன் வகுப்புகளுக்காகக் குழந்தைகள் ஸ்மார்ட்போன்கள் மூலம் பயின்று வந்தனர். படிப்பிற்காக செல்போன்கள் உபயோகித்த போதிலும் பல குழந்தைகள் செல்போன் விளையாட்டுகளில் மூழ்கினர்.
கொரோனா ஊரடங்கு முடிந்து, பள்ளிகள் திறக்கப்பட்ட போதிலும் பல குழந்தைகளிடையே அந்தப் பழக்கம் தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில் குழந்தைகள் ஆன்லைன் விளையாட்டுகளில் மூழ்குவதைத் தடுக்கும் வகையில், கோவை குரும்பபாளையம் ஜே.ஜே நகர் பகுதியில் வசித்து வரும் பிரணவ், பவன், கணேஷ் பாலா, அமுத ஸ்ரீ, கிரிஷிகா, சஞ்சய் ராம் வேல், ரித்தீஷ், சஷ்டிக், பத்மேஷ் பாலா ஆகிய 9-பள்ளி சிறுவர்-சிறுமியர்கள் இணைந்து தங்களது பகுதியில் வீடு வீடாகச் சென்று ஆன்லைன் விளையாட்டுகள் மூலம் ஏற்படும் தீமைகள் குறித்து நோட்டீஸ் வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
சிறுவர் சிறுமியரின் இந்தச் செயல் அப்பகுதியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் குழந்தைகள் மூலம் இந்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். இதுவரை 100-வீடுகளில் இந்த நோட்டீஸ் வழங்கி உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.