மீண்டும் சாலையை ஆக்கிரமித்து வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை: கோவை காளப்பட்டி அருகே தனியார் லேஅவுட்டால் ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த 30 அடி சாலை மாநகராட்சி அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளது.
கோவை காளப்பட்டி நேரு நகர் அருகே தனியார் லேஅவுட் ஒன்று உள்ளது. இந்த லேஅவுட்டில் சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் வரை 30 அடி சாலை உள்ளது.

இந்த லேஅவுட்டில் உள்ள சாலை வழியாக அருகில் இருக்கும் விவசாயிகள் தங்கள் நிலங்களுக்கு செல்ல முடியும். ஆனால் இந்த பாதை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்தது. இதுதொடர்பான புகார் மாநகராட்சி அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல அதிகாரிகள் புகார் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டனர்.

பின்னர், இந்த சாலை மாநகராட்சி சாலை எனவும், பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து, தனியார் லேஅவுட் கட்டுப்பாட்டில் இருந்த சாலை மீட்கப்பட்டது.

இதனிடையே, மீண்டும் சாலையை ஆக்கிரமித்து வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
கோவை காளப்பட்டி நேரு நகர் அருகே தனியார் லேஅவுட் ஒன்று உள்ளது. இந்த லேஅவுட்டில் சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் வரை 30 அடி சாலை உள்ளது.
இந்த லேஅவுட்டில் உள்ள சாலை வழியாக அருகில் இருக்கும் விவசாயிகள் தங்கள் நிலங்களுக்கு செல்ல முடியும். ஆனால் இந்த பாதை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்தது. இதுதொடர்பான புகார் மாநகராட்சி அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல அதிகாரிகள் புகார் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டனர்.
பின்னர், இந்த சாலை மாநகராட்சி சாலை எனவும், பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து, தனியார் லேஅவுட் கட்டுப்பாட்டில் இருந்த சாலை மீட்கப்பட்டது.
இதனிடையே, மீண்டும் சாலையை ஆக்கிரமித்து வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.