மீன்பிடி குத்தகை பாசி உரிமையை உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்க வலியுறுத்தி தாராபுரம் மீனவர் கூட்டுறவு சங்கத்தினர் மனு..!

அனைத்து வித நீர்நிலைகளில் மீன்பிடி குத்தகை பாசி உரிமையை உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்கங்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தாராபுரம் மீனவர் கூட்டுறவு சங்கத்தினர் மீன் பிடிக்கும் வலையுடன் வந்து மனு அளித்தனர்.


திருப்பூர்: உச்ச நீதிமன்றத்தின் ஆணைப்படி தமிழகத்தில் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து வித நீர்நிலைகளில் மீன்பிடி குத்தகை பாசி உரிமையை உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்கங்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தாராபுரம் மீனவர் கூட்டுறவு சங்கத்தினர் மீன் பிடிக்கும் வலை உடன் வந்து மனு அளித்தனர்.



திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் உள்ள நல்லதங்காள் ஓடை நீர்த்தேக்கத்தில் தாராபுரம் மீனவர் கூட்டுறவு சங்க உறுப்பினர்களால் மீன் பிடித்தல் ஆரம்பிக்கப்பட்டது.

கடந்த எட்டு ஆண்டுகளுக்கு மேலாக இந்த சங்கம் சார்பில் மீன்பிடித்தொழில் செய்யப்பட்டு வந்தது. ஆனால், கடந்த ஆண்டு ஏலம் மூலம் தனியாருக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. இதனால் கூட்டுறவு சங்க உறுப்பினர்களால் மீன் பிடிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு மதுரையில் உள்ள சென்னை உயர்நீதிமன்ற கிளையில், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் தொடுத்த வழக்கில் கூட்டுறவு சங்கங்களுக்கு மீன்பிடி குத்தகையில் முன்னுரிமை கூடாது என்றும் பொது ஏல முறையில் மட்டுமே மீன்பிடி குத்தகை உரிமை வழங்க வேண்டும் என்ற தீர்ப்பு அளிக்கப்பட்டது.

இந்த தீர்ப்பினால் 2.35 லட்சம் மீனவ மக்களின் குடும்பம் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. மேலும் தமிழ்நாட்டில் மீன்பிடித் தொழிலை அடிப்படையாகக் கொண்டு சிறப்பாக செயல்பட்டு வரும் 300 உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்கங்கள், அவற்றின் அங்கத்தினர்களாக உள்ள 82 ஆயிரம் உறுப்பினர்கள் மற்றும் 72 உள்நாட்டு மீனவ மகளிர் கூட்டுறவு சங்கங்கள் அதன் உறுப்பினர்கள் ஏழாயிரம் பேர் என அனைவரது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.

எந்த நோக்கத்திற்காக கூட்டுறவு சங்கங்கள் உருவாக்கப்பட்டதோ, அந்த நோக்கங்கள் முற்றிலும் சிதைக்கப்படும். ஏனெனில் பெரும் பண வசதி படைத்தவர்கள் மட்டுமே நீர்நிலைகளை ஏலம் எடுக்க முடியும்.



எனவே கூட்டுறவு சங்கங்களை பாதுகாக்கும் வகையில் ஈரோடு மாவட்டம் அந்தியூர் வரட்டுப்பள்ளம் நீர்த்தேக்க மீன்பிடி குத்தகை உரிமம் தொடர்பாக கடந்த 2018 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில், தமிழகத்தில் பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்துவித நீர்நிலைகளில் மீன்பிடி உரிமையை உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்கங்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்பதை திருப்பூர் மாவட்ட மீனவர் கூட்டுறவு சங்க கூட்டமைப்பு சார்பில், மீன் பிடிக்கும் வலையோடு வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...