கோவையில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டில் முறைகேடு நடைபெறுவதாக மாவட்ட ஆட்சியரிடம் புகார்..!

ஒரு சார்பினருக்கு மட்டும் டோக்கன்கள் விநியோக்கிக்கப்படுவதாக தமிழ்நாடு ஜல்லிக்கட்டு இளைஞர் பேரவையினர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.



கோவை: கோவை மாவட்டத்தில் நடைபெறவிருக்கும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு ஒரு சார்பினருக்கு மட்டும் டோக்கன்கள் விநியோக்கிக்கப்படுவதாக தமிழ்நாடு ஜல்லிக்கட்டு இளைஞர் பேரவையினர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.



இது தொடர்பாக அவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

கடந்த 2019ம் ஆண்டு தமிழ்நாடு ஜல்லிக்கட்டு இளைஞர் பேரவை என்ற அறக்கட்டளை கோயம்புத்தூர் காந்திபுரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்து, அதன் மூலம் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு சிறந்த முறையில் நடைபெற்று வருகிறது.

மாடுபிடி வீரர்கள் நலம் மற்றும் ஜல்லிக்கட்டு காளை வளர்ப்பு முறைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். தமிழ்நாடு ஜல்லிக்கட்டு இளைஞர் பேரவையில் மாவட்டம் தோறும் உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்கள் இருந்து செயல்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இந்த ஆண்டு கோயம்புத்தூரில் எல்.என்.டி பைபாஸ் சாலை அருகே ஜல்லிக்கட்டு போட்டி வரும் 9ம் தேதி நடைபெற உள்ளது.

இந்த சூழ்நிலையில், அந்த போட்டியில் கலந்துகொள்ள எங்களது அறக்கட்டளையைச் சேர்ந்த உறுப்பினர்கள் விழா கமிட்டியை தொடர்பு கொண்டபோது, மாடுபிடி வீரர்கள் மற்றும் காளை உரிமையாளர்கள் விண்ணப்பங்கள் கொடுக்கச் சென்றபோது ஏற்க மறுத்துள்ளனர்.

எனவே, மாவட்ட ஆட்சியர் தகுந்த நடவடிக்கை எடுத்து முறையாக டோக்கன் வழங்கி, ஜல்லிக்கட்டு போட்டியில் வீரர்கள் கலந்து கொள்ள செய்ய வேண்டுமென அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து அவர்கள் கூறுகையில்,

கோவையில் நடைபெற இருக்கும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு சில அமைப்புகளைச் சார்ந்தவர்களுக்கு மட்டும் டோக்கன்கள் வழங்கப்பட்டு மிகப்பெரிய முறைகேடு நடைபெற்று வருகிறது. இதனால் விவசாயிகள் பலரும் பாதிக்கப்படுகின்றனர். கோவையில் நடைபெறும் ஜல்லிக்கட்டிற்கு பிற மாவட்டங்களில் டோக்கன்கள் வழங்குகின்றனர்.

எனவே, ஜல்லிக்கட்டு நடைபெறும் பொது இடத்திலேயே டோக்கன்கள் வழங்கப்பட வேண்டும். சில அமைப்புகள் தலையீட்டின் காரணமாகவே இதில் அரசியல் தலையீடுகளும் வருகின்றது. முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் டோக்கன்கள் வழங்கப்பட வேண்டும்.

இல்லையென்றால் எங்கள் பேரவை சார்பில் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்படும். ஜல்லிக்கட்டை என்றும் அரசியலாக பார்க்க வேண்டாம் என தெரிவித்துள்ளனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...