மேலும், தமிழக அரசு உடனடியாக பொங்கல் பரிசு பணத்தை வழங்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பி பொங்கல் பானையை கீழே போட்டு உடைத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருப்பூர்: திருப்பூரில் பொங்கல் பரிசு பணமாக தமிழக அரசு குடும்ப அட்டைதாரர்களுக்கு ஐந்தாயிரம் பணம் வழங்கக்கோரி பொங்கல் பானையை உடைத்து இந்து தேசிய கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையானது ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு அப்போதைய அதிமுக அரசு 2500 ரூபாய் பொங்கல் பரிசு பணம் வழங்கியது.
அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின் பொங்கல் பரிசாக 5 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்றார்.
எனவே, தற்போதைய திமுக அரசு இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு பொங்கல் பரிசு பணம் ஐந்தாயிரம் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்து தேசிய கட்சியினர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக பொங்கல் பானையை தலையில் வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், தமிழக அரசு உடனடியாக பொங்கல் பரிசு பணத்தை வழங்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பி பொங்கல் பானையை கீழே போட்டு உடைத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.