கோவையில் தவறான தகவல் அளித்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உடற்பயிற்சி சாலையினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு..!

மேலும், தங்களுக்கு வேறு இடத்தில் உடற்பயிற்சி சாலை அமைக்க இடவசதி ஏற்படுத்தித் தர வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டனர்.


கோவை: கோவை மாநகராட்சி ஆணையாளருக்கு அதிகாரி ஒருவர் தவறான தகவல் அளிப்பதாகவும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், சுவாமி விவேகானந்தர் உடற்பயிற்சி சாலை மற்றும் நூலகத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உடற்பயிற்சி கருவிகளுடன் மனு அளித்தனர்.



இது குறித்து அவர்கள் தெரிவிக்கையில், கோவை தேர்முட்டி பவள வீதியில் 1985ம் ஆண்டில் உடற்பயிற்சி சாலை நடத்தி வந்த நிலையில் பள்ளி விரிவாக்கத்திற்காக அந்த உடற்பயிற்சி சாலை, வேறு மாநகராட்சி இடத்திற்கு மாற்றப்பட்டதாகவும் தற்போது வரை அந்த உடற்பயிற்சி நிலையம் செயல்பட்டு வந்த நிலையில், தற்போது வந்துள்ள மாநகராட்சி அதிகாரிகள் தங்களுடைய அந்த பயிற்சி சாலைக்கு அனுமதியில்லை என கூறி காலி செய்யும் படி மிரட்டுவதாக தெரிவித்தனர்.

மேலும், தாங்களே உடற்பயிற்சி சாலையை காலி செய்து கொடுத்த நிலையில் புதிதாக வந்த அதிகாரி ஒருவர், காவல்துறையினரை வைத்து தங்களை காலி செய்ய வைத்ததாக மாநகராட்சி ஆணையாளரிடம் தெரிவித்துள்ளதாகவும், இது போன்று தவறான தகவலை மாநகராட்சி ஆணையாளருக்கு வழங்கிய அந்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொண்டனர்.



மேலும், தங்களுக்கு வேறு இடத்தில் உடற்பயிற்சி சாலை அமைக்க இடவசதி ஏற்படுத்தி தர வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டனர்.

Newsletter

Tourist Entry Restricted due to flooding in Athirappilly Waterfalls for the third consecutive day

Continuous heavy rainfall over the Western Ghats has left the Athirappilly Waterfalls in spate for the third consecutive...

வெள்ளலூரில் ரூ.46 இலட்சம் செலவில் வீடில்லா நாய்களுக்கான கருத்தடை மையம்: மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு வளாகத்தில் 15வது மத்திய நிதிக்குழு மானிய...

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...