கோவையில் தவறான தகவல் அளித்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உடற்பயிற்சி சாலையினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு..!

மேலும், தங்களுக்கு வேறு இடத்தில் உடற்பயிற்சி சாலை அமைக்க இடவசதி ஏற்படுத்தித் தர வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டனர்.


கோவை: கோவை மாநகராட்சி ஆணையாளருக்கு அதிகாரி ஒருவர் தவறான தகவல் அளிப்பதாகவும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், சுவாமி விவேகானந்தர் உடற்பயிற்சி சாலை மற்றும் நூலகத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உடற்பயிற்சி கருவிகளுடன் மனு அளித்தனர்.



இது குறித்து அவர்கள் தெரிவிக்கையில், கோவை தேர்முட்டி பவள வீதியில் 1985ம் ஆண்டில் உடற்பயிற்சி சாலை நடத்தி வந்த நிலையில் பள்ளி விரிவாக்கத்திற்காக அந்த உடற்பயிற்சி சாலை, வேறு மாநகராட்சி இடத்திற்கு மாற்றப்பட்டதாகவும் தற்போது வரை அந்த உடற்பயிற்சி நிலையம் செயல்பட்டு வந்த நிலையில், தற்போது வந்துள்ள மாநகராட்சி அதிகாரிகள் தங்களுடைய அந்த பயிற்சி சாலைக்கு அனுமதியில்லை என கூறி காலி செய்யும் படி மிரட்டுவதாக தெரிவித்தனர்.

மேலும், தாங்களே உடற்பயிற்சி சாலையை காலி செய்து கொடுத்த நிலையில் புதிதாக வந்த அதிகாரி ஒருவர், காவல்துறையினரை வைத்து தங்களை காலி செய்ய வைத்ததாக மாநகராட்சி ஆணையாளரிடம் தெரிவித்துள்ளதாகவும், இது போன்று தவறான தகவலை மாநகராட்சி ஆணையாளருக்கு வழங்கிய அந்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொண்டனர்.



மேலும், தங்களுக்கு வேறு இடத்தில் உடற்பயிற்சி சாலை அமைக்க இடவசதி ஏற்படுத்தி தர வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...