ஆனைமலை அருகே கல்வி அதிகாரி வீட்டின் பூட்டை உடைத்து திருடர்கள் கைவரிசை..!

புகாரின் பேரில் கோட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தடயங்களை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: ஆனைமலை அருகே கல்வி அதிகாரி வீட்டின் பூட்டை உடைத்து கைவரிசை காட்டிய மர்ம நபர்கள் குறித்து கோட்டூர் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆனைமலை தாலுக்கா கோட்டூர் பகுதியில் உள்ள அருணாச்சலம் நகரில் வசித்து வருபவர் ஜோசப் கருணாகரன்(59). இவர் பொள்ளாச்சி தெற்கு வட்டார கல்வி அலுவலராக பணியாற்றி வருகிறார்.

கடந்த 30ம் தேதி புதுவருட கொண்டாட்டத்திற்காக தன் வீட்டைப் பூட்டிவிட்டு கோவையில் உள்ள தன் மகள் வீட்டிற்குச் சென்றுள்ளார். புத்தாண்டு கொண்டாட்டத்தை முடித்துவிட்டு நேற்று நள்ளிரவு வீடு திரும்பிய போது வீட்டின் பக்கவாட்டு கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

பின்னர், வீட்டிற்கு உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் வைத்திருந்த 10 ஆயிரம் ரூபாய் பணம், இரண்டு பவுன் தங்க கைசங்கிலி மற்றும் லேப்டாப் உள்ளிட்டவை திருடு போனது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து அவர் கோட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த கோட்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தடயங்களை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...