இந்த போட்டியில் ரூ. 1 லட்சத்து 75 ஆயிரம் ரொக்கப் பணம் மற்றும் வெற்றிக் கோப்பைகள் வழங்கப்பட்டது.
கோவை: கோவை பொள்ளாச்சியில் நடைபெற்ற தென்னிந்திய அளவிலான பைக் பந்தய போட்டியில் 160 வீரர்கள் பங்கேற்றனர்.
திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் பிறந்த நாள் விழாவைக் கொண்டாடும் வகையிலும், பைக் பந்தய வீரர்களை ஊக்குவிக்கும் விதமாகவும், கோவை தெற்கு மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு மற்றும் இளைஞரணி சார்பில் தென்னிந்திய அளவிலான பந்தயம் பொள்ளாச்சி ஜோதிநகர் மைதானத்தில் நடைபெற்றது.

இதில் தமிழகத்தின் கோவை, ஈரோடு, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 160 பைக் பந்தய வீரர்கள் கலந்து கொண்டனர்.
11 வட்ட லேப்புகள் அமைக்கப்பட்ட மைதானத்தில் நோவெல் 4 ரவுண்டு, இந்தியன் ஓபன் 10 ரவுண்டு, லேடிஸ் கிளாஸ் 3 ரவுண்டு உள்ளிட்ட 8 பிரிவுகளில் பந்தயம் நடைபெற்றது.

போட்டியில் கலந்து கொண்ட வீரர்கள் சாதுரியமாகவும், வேகமாகவும் தங்களது பைக்குகளை லாவகமாக இயக்கியதைக் கண்டு ஆயிரக்கணக்கான இளைஞர்கள், பொதுமக்கள் கைதட்டி ஆரவாரம் செய்து வீரர்களை உற்சாகப்படுத்தினர்.
8 பிரிவுகளில் முதல் பரிசு பெற்ற வீரர்களுக்கு தலா பத்தாயிரம் ரூபாயும், இரண்டாம் பரிசு பெற்ற வீரர்களுக்கு 6 ஆயிரம் ரூபாயும், மூன்றாம் பரிசு பெற்ற வீரர்களுக்கு நான்காயிரம் ரூபாய் என 1 லட்சத்து 75 ஆயிரம் ரொக்கப் பணம் மற்றும் வெற்றிக் கோப்பைகளும் வழங்கப்பட்டது.

பரிசளிப்பு விழாவில் கோவை முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ் கலந்துகொண்டு வீரர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் பிறந்த நாள் விழாவைக் கொண்டாடும் வகையிலும், பைக் பந்தய வீரர்களை ஊக்குவிக்கும் விதமாகவும், கோவை தெற்கு மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு மற்றும் இளைஞரணி சார்பில் தென்னிந்திய அளவிலான பந்தயம் பொள்ளாச்சி ஜோதிநகர் மைதானத்தில் நடைபெற்றது.
இதில் தமிழகத்தின் கோவை, ஈரோடு, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 160 பைக் பந்தய வீரர்கள் கலந்து கொண்டனர்.
11 வட்ட லேப்புகள் அமைக்கப்பட்ட மைதானத்தில் நோவெல் 4 ரவுண்டு, இந்தியன் ஓபன் 10 ரவுண்டு, லேடிஸ் கிளாஸ் 3 ரவுண்டு உள்ளிட்ட 8 பிரிவுகளில் பந்தயம் நடைபெற்றது.
போட்டியில் கலந்து கொண்ட வீரர்கள் சாதுரியமாகவும், வேகமாகவும் தங்களது பைக்குகளை லாவகமாக இயக்கியதைக் கண்டு ஆயிரக்கணக்கான இளைஞர்கள், பொதுமக்கள் கைதட்டி ஆரவாரம் செய்து வீரர்களை உற்சாகப்படுத்தினர்.
8 பிரிவுகளில் முதல் பரிசு பெற்ற வீரர்களுக்கு தலா பத்தாயிரம் ரூபாயும், இரண்டாம் பரிசு பெற்ற வீரர்களுக்கு 6 ஆயிரம் ரூபாயும், மூன்றாம் பரிசு பெற்ற வீரர்களுக்கு நான்காயிரம் ரூபாய் என 1 லட்சத்து 75 ஆயிரம் ரொக்கப் பணம் மற்றும் வெற்றிக் கோப்பைகளும் வழங்கப்பட்டது.
பரிசளிப்பு விழாவில் கோவை முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ் கலந்துகொண்டு வீரர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.