கோவையில் சாலை விபத்தில் போலீஸ்காரர் பலி

கோவையில் இருசக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதி ஏற்பட்ட விபத்தில் போலீஸ்காரர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக கோவை கிழக்கு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


கோவை: கோவையில் இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதி ஏற்பட்ட விபத்தில் போலீஸ்காரர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.



கோவை, பீளமேடு காவல் நிலையத்தில் போலீஸாக பணியாற்றி வருபவர் கணேசன் (45). இவர் நேற்று இரவு தனது இருசக்கர வாகனத்தில் காளப்பட்டியிலிருந்து சித்ரா நோக்கிச் சென்று கொண்டிருந்தார்.

சித்ரா அருகே வந்தபோது கோவையிலிருந்து சென்னைக்கு அவினாசி சாலையில் சென்ற தனியார் பேருந்து ஒன்று கணேசனின் இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவருக்குப் பலத்த காயம் ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் மயங்கினார்.

இதையடுத்து, அங்குக் குவிந்த பொதுமக்கள் அவரை மீட்டு அருகிலிருந்த தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்குக் கணேசனுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர், மேல் சிகிச்சைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்ததை உறுதி செய்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாகக் கோவை கிழக்கு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...