கோவையில் இருசக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதி ஏற்பட்ட விபத்தில் போலீஸ்காரர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக கோவை கிழக்கு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கோவை: கோவையில் இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதி ஏற்பட்ட விபத்தில் போலீஸ்காரர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கோவை, பீளமேடு காவல் நிலையத்தில் போலீஸாக பணியாற்றி வருபவர் கணேசன் (45). இவர் நேற்று இரவு தனது இருசக்கர வாகனத்தில் காளப்பட்டியிலிருந்து சித்ரா நோக்கிச் சென்று கொண்டிருந்தார்.
சித்ரா அருகே வந்தபோது கோவையிலிருந்து சென்னைக்கு அவினாசி சாலையில் சென்ற தனியார் பேருந்து ஒன்று கணேசனின் இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவருக்குப் பலத்த காயம் ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் மயங்கினார்.
இதையடுத்து, அங்குக் குவிந்த பொதுமக்கள் அவரை மீட்டு அருகிலிருந்த தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்குக் கணேசனுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர், மேல் சிகிச்சைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்ததை உறுதி செய்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாகக் கோவை கிழக்கு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கோவை, பீளமேடு காவல் நிலையத்தில் போலீஸாக பணியாற்றி வருபவர் கணேசன் (45). இவர் நேற்று இரவு தனது இருசக்கர வாகனத்தில் காளப்பட்டியிலிருந்து சித்ரா நோக்கிச் சென்று கொண்டிருந்தார்.
சித்ரா அருகே வந்தபோது கோவையிலிருந்து சென்னைக்கு அவினாசி சாலையில் சென்ற தனியார் பேருந்து ஒன்று கணேசனின் இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவருக்குப் பலத்த காயம் ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் மயங்கினார்.
இதையடுத்து, அங்குக் குவிந்த பொதுமக்கள் அவரை மீட்டு அருகிலிருந்த தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்குக் கணேசனுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர், மேல் சிகிச்சைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்ததை உறுதி செய்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாகக் கோவை கிழக்கு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.