வால்பாறை பொள்ளாச்சி சாலையில் அதிக பனிமூட்டம் காணப்படுவதால் வாகன ஓட்டிகள் வாகனத்தை இயக்குவதற்குச் சிரமப்பட்டனர்.
கோவை: வால்பாறை பொள்ளாச்சி சாலையில் அதிக பனிமூட்டம் காணப்படுவதால் வாகன ஓட்டிகள் வாகனத்தை இயக்குவதற்குச் சிரமப்பட்டனர்.
கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் இரண்டு நாளாக மழை பெய்யும் அறிகுறி காணப்பட்ட நிலையில், நேற்று இரவு சாரல் மழை பெய்தது.

இந்நிலையில், வால்பாறை பொள்ளாச்சி சாலையில் இன்று அதிகமாகப் பனிமூட்டம் காணப்படுகிறது.

புத்தாண்டு விடுமுறை என்பதால் வால்பாறைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் பனிமூட்டத்தைப் பார்த்து ரசித்து சாலை ஓரங்களில் நின்று புகைப் படங்கள் எடுத்து மகிழ்ந்து வருகின்றனர்.

வால்பாறைக்கு வரும் சாலையில் 9-வது கொண்டை ஊசி வளைவு, 13-வது கொண்டை ஊசி வளைவு, மற்றும் வட்டார் பால்ஷ், டைகர் பள்ளத்தாக்கு, போன்ற இடங்களில் அதிகம் பனி மூட்டம் காணப்படுகிறது.
தேயிலைத் தோட்டங்கள், காடுகள், மலைகள் போன்றவை தெரியாமல் பனிமூட்டம் காணப்படுகிறது. சாலையில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் பட்ட பகலில் வாகனங்கள் முகப்பு விளக்கு ஏந்தி வாகனங்கள் இயக்கப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் வாகனத்தை இயக்குவதற்குச் சிரமப்பட்டனர்.
கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் இரண்டு நாளாக மழை பெய்யும் அறிகுறி காணப்பட்ட நிலையில், நேற்று இரவு சாரல் மழை பெய்தது.
இந்நிலையில், வால்பாறை பொள்ளாச்சி சாலையில் இன்று அதிகமாகப் பனிமூட்டம் காணப்படுகிறது.
புத்தாண்டு விடுமுறை என்பதால் வால்பாறைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் பனிமூட்டத்தைப் பார்த்து ரசித்து சாலை ஓரங்களில் நின்று புகைப் படங்கள் எடுத்து மகிழ்ந்து வருகின்றனர்.
வால்பாறைக்கு வரும் சாலையில் 9-வது கொண்டை ஊசி வளைவு, 13-வது கொண்டை ஊசி வளைவு, மற்றும் வட்டார் பால்ஷ், டைகர் பள்ளத்தாக்கு, போன்ற இடங்களில் அதிகம் பனி மூட்டம் காணப்படுகிறது.
தேயிலைத் தோட்டங்கள், காடுகள், மலைகள் போன்றவை தெரியாமல் பனிமூட்டம் காணப்படுகிறது. சாலையில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் பட்ட பகலில் வாகனங்கள் முகப்பு விளக்கு ஏந்தி வாகனங்கள் இயக்கப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் வாகனத்தை இயக்குவதற்குச் சிரமப்பட்டனர்.