கோவை ஈச்சனாரி விநாயகர் கோவிலில் புத்தாண்டை முன்னிட்டு தங்க கவச அலங்காரம்..!

பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருக்காமல் இருப்பதற்காக, உடனுக்குடன் தீபாராதனை காண்பித்து அனுப்பி வைக்கப்படுகின்றனர்.



கோவை: கோவை ஈச்சனாரி விநாயகர் கோவிலில் புத்தாண்டை முன்னிட்டு தங்க கவச அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.



2022 ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கோவில்கள் தேவாலயங்களில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி வழிபாடு நடத்த தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.

இதனைத் தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள கோவில்கள் தேவாலயங்களில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி மக்கள் வழிபாட்டு தலங்களில் வழிபட்டு வருகின்றனர்.

கோவையில் நள்ளிரவில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பிரார்த்தனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அதிகாலை முதல் கோவையில் உள்ள இந்து கோவில்களில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, கோவையில் பிரசித்தி பெற்ற ஈச்சனாரி விநாயகர் கோவிலில் விநாயகருக்கு தங்கக் கவச அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. புத்தாண்டை முன்னிட்டு காலை முதலே மக்கள் கோவிலில் வழிப்பட்டு வருகின்றனர்.



கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி சாமி தரிசனம் செய்து வருகின்றனர். கோவில் நிர்வாகத்தினரும் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருக்காமல் இருப்பதற்காக உடனுக்குடன் தீபாராதனை காண்பித்து அனுப்பி வைக்கின்றனர்.

மேலும், கோவில் வளாகத்திற்குள் பொதுமக்கள் அமர்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் உடனுக்குடன் சாமி தரிசனம் செய்துவிட்டு பொதுமக்கள் வெளியேறுகின்றனர்.



Newsletter

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...