கோவை ஈச்சனாரி விநாயகர் கோவிலில் புத்தாண்டை முன்னிட்டு தங்க கவச அலங்காரம்..!

பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருக்காமல் இருப்பதற்காக, உடனுக்குடன் தீபாராதனை காண்பித்து அனுப்பி வைக்கப்படுகின்றனர்.



கோவை: கோவை ஈச்சனாரி விநாயகர் கோவிலில் புத்தாண்டை முன்னிட்டு தங்க கவச அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.



2022 ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கோவில்கள் தேவாலயங்களில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி வழிபாடு நடத்த தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.

இதனைத் தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள கோவில்கள் தேவாலயங்களில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி மக்கள் வழிபாட்டு தலங்களில் வழிபட்டு வருகின்றனர்.

கோவையில் நள்ளிரவில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பிரார்த்தனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அதிகாலை முதல் கோவையில் உள்ள இந்து கோவில்களில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, கோவையில் பிரசித்தி பெற்ற ஈச்சனாரி விநாயகர் கோவிலில் விநாயகருக்கு தங்கக் கவச அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. புத்தாண்டை முன்னிட்டு காலை முதலே மக்கள் கோவிலில் வழிப்பட்டு வருகின்றனர்.



கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி சாமி தரிசனம் செய்து வருகின்றனர். கோவில் நிர்வாகத்தினரும் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருக்காமல் இருப்பதற்காக உடனுக்குடன் தீபாராதனை காண்பித்து அனுப்பி வைக்கின்றனர்.

மேலும், கோவில் வளாகத்திற்குள் பொதுமக்கள் அமர்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் உடனுக்குடன் சாமி தரிசனம் செய்துவிட்டு பொதுமக்கள் வெளியேறுகின்றனர்.



Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...