கோவையில் செல்போன் கடையில் ரூபாய் 20-லட்சம் கொள்ளை: வடமாநில வாலிபர் கைது

காந்திபுரம் செல்போன் கடையில் ரூபாய் 20-லட்சம் கொள்ளையடித்த வழக்கில் வடமாநில வாலிபரை போலீசார் ராஜஸ்தானில் வைத்து கைது செய்தனர்.


கோவை: காந்திபுரம் செல்போன் கடையில் ரூபாய் 20-லட்சம் கொள்ளையடித்த வழக்கில் வடமாநில வாலிபரை போலீசார் ராஜஸ்தானில் வைத்து கைது செய்தனர்.

கோவை காந்திபுரம் பகுதியில் செல்போன் மற்றும் உதிரிப்பாகங்கள் விற்பனை செய்யும் கடைகள் செயல்பட்டு வருகின்றன.

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் பிரதாப் ராஜ் ஆகியோர் காந்திபுரம் கிராஸ்கட் 8-வது வீதியில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் செல்போன் உதிரிப்பாகங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். கடந்த 13-ம் தேதி இரவு இவர்கள் வழக்கம் போல் கடையை மூடி விட்டு வீட்டிற்குச் சென்றனர்.

நள்ளிரவு கடையின் ஷட்டர் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர் ஒருவர் கடையிலிருந்த பணத்தைக் கொள்ளையடித்துத் தப்பிச் சென்றனர். உரிமையாளர் போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி குற்றவாளிகளைத் தேடி வந்தனர்.

இந்த நிலையில் இக்கொள்ளை வழக்கில் தொடர்புடைய ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பிரிதிவி பாரதி 27, என்பவரை போலீசார் ராஜஸ்தானில் கைது செய்தனர். அவரை அழைத்து வரப்பட்டு 9 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து அவருடைய கூட்டாளிகள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Newsletter

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...