காந்திபுரம் செல்போன் கடையில் ரூபாய் 20-லட்சம் கொள்ளையடித்த வழக்கில் வடமாநில வாலிபரை போலீசார் ராஜஸ்தானில் வைத்து கைது செய்தனர்.
கோவை: காந்திபுரம் செல்போன் கடையில் ரூபாய் 20-லட்சம் கொள்ளையடித்த வழக்கில் வடமாநில வாலிபரை போலீசார் ராஜஸ்தானில் வைத்து கைது செய்தனர்.
கோவை காந்திபுரம் பகுதியில் செல்போன் மற்றும் உதிரிப்பாகங்கள் விற்பனை செய்யும் கடைகள் செயல்பட்டு வருகின்றன.
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் பிரதாப் ராஜ் ஆகியோர் காந்திபுரம் கிராஸ்கட் 8-வது வீதியில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் செல்போன் உதிரிப்பாகங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். கடந்த 13-ம் தேதி இரவு இவர்கள் வழக்கம் போல் கடையை மூடி விட்டு வீட்டிற்குச் சென்றனர்.
நள்ளிரவு கடையின் ஷட்டர் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர் ஒருவர் கடையிலிருந்த பணத்தைக் கொள்ளையடித்துத் தப்பிச் சென்றனர். உரிமையாளர் போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி குற்றவாளிகளைத் தேடி வந்தனர்.
இந்த நிலையில் இக்கொள்ளை வழக்கில் தொடர்புடைய ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பிரிதிவி பாரதி 27, என்பவரை போலீசார் ராஜஸ்தானில் கைது செய்தனர். அவரை அழைத்து வரப்பட்டு 9 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து அவருடைய கூட்டாளிகள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
கோவை காந்திபுரம் பகுதியில் செல்போன் மற்றும் உதிரிப்பாகங்கள் விற்பனை செய்யும் கடைகள் செயல்பட்டு வருகின்றன.
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் பிரதாப் ராஜ் ஆகியோர் காந்திபுரம் கிராஸ்கட் 8-வது வீதியில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் செல்போன் உதிரிப்பாகங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். கடந்த 13-ம் தேதி இரவு இவர்கள் வழக்கம் போல் கடையை மூடி விட்டு வீட்டிற்குச் சென்றனர்.
நள்ளிரவு கடையின் ஷட்டர் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர் ஒருவர் கடையிலிருந்த பணத்தைக் கொள்ளையடித்துத் தப்பிச் சென்றனர். உரிமையாளர் போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி குற்றவாளிகளைத் தேடி வந்தனர்.
இந்த நிலையில் இக்கொள்ளை வழக்கில் தொடர்புடைய ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பிரிதிவி பாரதி 27, என்பவரை போலீசார் ராஜஸ்தானில் கைது செய்தனர். அவரை அழைத்து வரப்பட்டு 9 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து அவருடைய கூட்டாளிகள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.