கோவை மருதமலை கோவிலில் மருத்துவ முதலுதவி முகாம் திறப்பு..!

இதில், 4 படுக்கை வசதிகள் உட்பட அடிப்படை மருத்துவ உபகரணங்கள், ஆக்சிஜன் சிலிண்டர்கள் வைக்கப்பட்டுள்ளன.


கோவை: கோவை மருதமலை கோவிலில் மருத்துவ முதலுதவி மையத்தினை காணொளி மூலம் முதலமைச்சர் திறந்து வைத்தார்.

கோவை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோயிலாக விளங்கும் மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் 10 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மருத்துவ முதலுதவி மையத்தினை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் துவக்கி வைத்தார்.



மருதமலை கோவிலில் முடி காணிக்கை செலுத்தும் இடம் அருகில் இந்த மருத்துவ முதலுதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த முதலுதவி மையத்தில் இரண்டு மருத்துவர்கள், இரண்டு செவிலியர்கள், இரண்டு பல்நோக்கு மருத்துவ பணியாளர்கள் சுழற்சி முறையில் பணியாற்ற உள்ளனர்.

மேலும், 4 படுக்கை வசதிகள் உட்பட அடிப்படை மருத்துவ உபகரணங்கள் ஆக்சிஜன் சிலிண்டர்கள் வைக்கப்பட்டுள்ளன. கோவிலுக்கு வரும் பக்தர்கள் யாரேனுக்கும் மூச்சுத்திணறல் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டால் உடனடியாக இந்த மையத்தைத் தொடர்புகொண்டு முதலுதவி பெறலாம்.

இந்த முகாமின் துவக்க விழா நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் சமீரன், கோவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன் உட்பட கோவில் நிர்வாகிகள் திமுகவினர் ஆகியோர் பங்கேற்றனர்.



இதில் மாவட்ட ஆட்சியர் சமீரன் அங்கு கட்டப்பட்டுள்ள மருத்துவ மையத்தை பார்வையிட்டு அங்கு பணிபுரிய உள்ள மருத்துவர்களிடமும் செவிலியர்களிடமும் எவ்வித முதலுதவிகள் வழங்கப்பட உள்ளது என்பன குறித்து கேட்டறிந்தார்.

Newsletter

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...