பல் மருத்துவரை மிரட்டி 5-பவுன் நகை, பணம் பறிப்பு

பல் மருத்துவரை மிரட்டி 5-பவுன் நகை, பணம் பறித்த சம்பவம் தொடர்பாக, வழக்குப்பதிவு செய்து ரயில் பாதை ஓரம் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


கோவை: சிறுநீர் கழிக்க சென்ற பல் மருத்துவரை மிரட்டி 5-பவுன் நகை, பணம் பறித்த சம்பவம் தொடர்பாக, வழக்குப்பதிவு செய்து ரயில் பாதை ஓரம் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கோவை பீளமேடு தண்ணீர்ப்பந்தல் பகுதியைச் சேர்ந்தவர் ஹரி பவித்ரன் 35, பல் மருத்துவர். இவர் நேற்று இரவு ஆர்.எஸ் புரத்தில் உள்ள தனது மருத்துவமனைக்குச் சென்று விட்டு வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தார்.

சிரியன் சர்ச் ரோட்டில் சென்ற போது வாகனத்தை நிறுத்திவிட்டு ரயில் பாதை ஓரம் சிறுநீர் கழிக்கச் சென்ற போது இருட்டான பகுதியில் மறைந்திருந்த 3-பேர் மருத்துவரை மிரட்டி நகை பணம் கேட்டனர்.

அதை தர மறுத்ததால் கோபம் அடைந்த 3-பேரும் ஹரி பவித்திரன் கழுத்தில் அணிந்திருந்த 5-பவுன் நகை 3,500-ரூபாய் ரொக்கம், இரண்டு ஏடிஎம் கார்டு, செல்போன் ஆகியவற்றைப் பறித்தனர்.

மேலும் அவர் அணிந்திருந்த ஆடைகளை மிரட்டி கழட்டினர். பின்னர் 3-பேரும் சிறிது தூரம் சென்று ஆடைகளை வீசிவிட்டு நகை பணம் மற்றும் செல்போன் ஆகியவற்றுடன் தப்பினர்.

தொடர்பாக ஹரிபவித்ரன் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ரயில் பாதை ஓரம் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து விசாரித்து வருகின்றனர்.

Newsletter

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...