பல் மருத்துவரை மிரட்டி 5-பவுன் நகை, பணம் பறிப்பு

பல் மருத்துவரை மிரட்டி 5-பவுன் நகை, பணம் பறித்த சம்பவம் தொடர்பாக, வழக்குப்பதிவு செய்து ரயில் பாதை ஓரம் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


கோவை: சிறுநீர் கழிக்க சென்ற பல் மருத்துவரை மிரட்டி 5-பவுன் நகை, பணம் பறித்த சம்பவம் தொடர்பாக, வழக்குப்பதிவு செய்து ரயில் பாதை ஓரம் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கோவை பீளமேடு தண்ணீர்ப்பந்தல் பகுதியைச் சேர்ந்தவர் ஹரி பவித்ரன் 35, பல் மருத்துவர். இவர் நேற்று இரவு ஆர்.எஸ் புரத்தில் உள்ள தனது மருத்துவமனைக்குச் சென்று விட்டு வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தார்.

சிரியன் சர்ச் ரோட்டில் சென்ற போது வாகனத்தை நிறுத்திவிட்டு ரயில் பாதை ஓரம் சிறுநீர் கழிக்கச் சென்ற போது இருட்டான பகுதியில் மறைந்திருந்த 3-பேர் மருத்துவரை மிரட்டி நகை பணம் கேட்டனர்.

அதை தர மறுத்ததால் கோபம் அடைந்த 3-பேரும் ஹரி பவித்திரன் கழுத்தில் அணிந்திருந்த 5-பவுன் நகை 3,500-ரூபாய் ரொக்கம், இரண்டு ஏடிஎம் கார்டு, செல்போன் ஆகியவற்றைப் பறித்தனர்.

மேலும் அவர் அணிந்திருந்த ஆடைகளை மிரட்டி கழட்டினர். பின்னர் 3-பேரும் சிறிது தூரம் சென்று ஆடைகளை வீசிவிட்டு நகை பணம் மற்றும் செல்போன் ஆகியவற்றுடன் தப்பினர்.

தொடர்பாக ஹரிபவித்ரன் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ரயில் பாதை ஓரம் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து விசாரித்து வருகின்றனர்.

Newsletter

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...

தேக்கம்பட்டியில் மீண்டும் கோயில் யானைகள் புத்துணர்வு முகாம்: முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்த அதிகாரிகள்

தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் மீண்டும் நடைபெறவுள்ள கோயில் யானைகள் புத்துணர்வு முகாமை முன்னிட்டு, இந்து சமய அறநிலையத்த...

கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு முதியவர் தர்ணா; அரசு மருத்துவமனை குறித்து புகார்

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தின்போது, அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கப்படவ...

ஜூன் இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு சாய்பாபா காலனி மேம்பாலம் திறக்கப்படும்: அமைச்சர் சம்பத்குமார்

கோவையில் ரூ.71 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை அமைச்சர் வி. சம்பத்குமார் ஆய்வு செ...