பல் மருத்துவரை மிரட்டி 5-பவுன் நகை, பணம் பறித்த சம்பவம் தொடர்பாக, வழக்குப்பதிவு செய்து ரயில் பாதை ஓரம் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கோவை: சிறுநீர் கழிக்க சென்ற பல் மருத்துவரை மிரட்டி 5-பவுன் நகை, பணம் பறித்த சம்பவம் தொடர்பாக, வழக்குப்பதிவு செய்து ரயில் பாதை ஓரம் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கோவை பீளமேடு தண்ணீர்ப்பந்தல் பகுதியைச் சேர்ந்தவர் ஹரி பவித்ரன் 35, பல் மருத்துவர். இவர் நேற்று இரவு ஆர்.எஸ் புரத்தில் உள்ள தனது மருத்துவமனைக்குச் சென்று விட்டு வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தார்.
சிரியன் சர்ச் ரோட்டில் சென்ற போது வாகனத்தை நிறுத்திவிட்டு ரயில் பாதை ஓரம் சிறுநீர் கழிக்கச் சென்ற போது இருட்டான பகுதியில் மறைந்திருந்த 3-பேர் மருத்துவரை மிரட்டி நகை பணம் கேட்டனர்.
அதை தர மறுத்ததால் கோபம் அடைந்த 3-பேரும் ஹரி பவித்திரன் கழுத்தில் அணிந்திருந்த 5-பவுன் நகை 3,500-ரூபாய் ரொக்கம், இரண்டு ஏடிஎம் கார்டு, செல்போன் ஆகியவற்றைப் பறித்தனர்.
மேலும் அவர் அணிந்திருந்த ஆடைகளை மிரட்டி கழட்டினர். பின்னர் 3-பேரும் சிறிது தூரம் சென்று ஆடைகளை வீசிவிட்டு நகை பணம் மற்றும் செல்போன் ஆகியவற்றுடன் தப்பினர்.
தொடர்பாக ஹரிபவித்ரன் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ரயில் பாதை ஓரம் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து விசாரித்து வருகின்றனர்.
கோவை பீளமேடு தண்ணீர்ப்பந்தல் பகுதியைச் சேர்ந்தவர் ஹரி பவித்ரன் 35, பல் மருத்துவர். இவர் நேற்று இரவு ஆர்.எஸ் புரத்தில் உள்ள தனது மருத்துவமனைக்குச் சென்று விட்டு வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தார்.
சிரியன் சர்ச் ரோட்டில் சென்ற போது வாகனத்தை நிறுத்திவிட்டு ரயில் பாதை ஓரம் சிறுநீர் கழிக்கச் சென்ற போது இருட்டான பகுதியில் மறைந்திருந்த 3-பேர் மருத்துவரை மிரட்டி நகை பணம் கேட்டனர்.
அதை தர மறுத்ததால் கோபம் அடைந்த 3-பேரும் ஹரி பவித்திரன் கழுத்தில் அணிந்திருந்த 5-பவுன் நகை 3,500-ரூபாய் ரொக்கம், இரண்டு ஏடிஎம் கார்டு, செல்போன் ஆகியவற்றைப் பறித்தனர்.
மேலும் அவர் அணிந்திருந்த ஆடைகளை மிரட்டி கழட்டினர். பின்னர் 3-பேரும் சிறிது தூரம் சென்று ஆடைகளை வீசிவிட்டு நகை பணம் மற்றும் செல்போன் ஆகியவற்றுடன் தப்பினர்.
தொடர்பாக ஹரிபவித்ரன் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ரயில் பாதை ஓரம் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து விசாரித்து வருகின்றனர்.