கோவையில் கீழே கிடந்த ரூ.8-ஆயிரம் பணத்தை நேர்மையாக ஒப்படைத்த விற்பனை பிரதிநிதி

அன்னூர் பகுதியில் கீழே கிடந்த ரூ.8070-ஐ நேர்மையாகக் காவல் துறையினரிடம் ஒப்படைத்த விற்பனை பிரதிநிதிக்கு காவல் துறையினர் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர்.


அன்னூர்: கீழே கிடந்த ரூ.8070 ஐ நேர்மையாகக் காவல் துறையினரிடம் ஒப்படைத்த விற்பனை பிரதிநிதிக்கு காவல் துறையினர் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர்.

கோவை மாவட்டம் அன்னூரை அடுத்துள்ள கணேசபுரம் பகுதியைச் சேர்ந்தவர் அருண் பிரகாஷ் (வயது 28). இவர் அன்னூர் பேரூராட்சியில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வருகிறார்.

இன்று வசூல் செய்த பணம் ரூ.8070 ஐ எடுத்துக்கொண்டு அன்னூர் நோக்கிச் சென்றுள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாகப் பணம் எங்கோ கீழே விழுந்துள்ளது. இதனை அறியாத அருண் பிரகாஷ் அலுவலகம் சென்று பார்த்த பொழுது பணம் கீழே விழுந்தது தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து தான் வந்த வழிநெடுகிலும் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. இதனையடுத்து அன்னூர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.

அதே நேரத்தில் சிறுமுகை நால்ரோடு காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் (வயது 23). இவர் மசாலா பொடிகள் விற்பனை செய்யும் நிறுவனத்தின் விற்பனை பிரதிநிதியாக பணிபுரிந்து வருகிறார்.

இவர் அன்னூர் பகுதியில் வந்து கொண்டிருந்த பொழுது கீழே பணம் கட்டாகக் கிடப்பதைக் கண்டுள்ளார். இதனையடுத்து அதனை எடுத்த பிரகாஷ் நேரடியாக அன்னூர் காவல் நிலையம் வந்து போலீசாரிடம் ஒப்படைத்தார்.

போலீசார் உரிய விசாரணைக்குப் பின்னர் பேரூராட்சி அலுவலர் அருண் பிரகாஷிடம் ஒப்படைத்தனர்.

கீழே கிடந்த ரூ.8070 ஐ நேர்மையாகக் காவல் துறையினரிடம் ஒப்படைத்த விற்பனை பிரதிநிதியான பிரகாஷ்-க்கு காவல் துறையினர் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...