கோவையில் கீழே கிடந்த ரூ.8-ஆயிரம் பணத்தை நேர்மையாக ஒப்படைத்த விற்பனை பிரதிநிதி

அன்னூர் பகுதியில் கீழே கிடந்த ரூ.8070-ஐ நேர்மையாகக் காவல் துறையினரிடம் ஒப்படைத்த விற்பனை பிரதிநிதிக்கு காவல் துறையினர் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர்.


அன்னூர்: கீழே கிடந்த ரூ.8070 ஐ நேர்மையாகக் காவல் துறையினரிடம் ஒப்படைத்த விற்பனை பிரதிநிதிக்கு காவல் துறையினர் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர்.

கோவை மாவட்டம் அன்னூரை அடுத்துள்ள கணேசபுரம் பகுதியைச் சேர்ந்தவர் அருண் பிரகாஷ் (வயது 28). இவர் அன்னூர் பேரூராட்சியில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வருகிறார்.

இன்று வசூல் செய்த பணம் ரூ.8070 ஐ எடுத்துக்கொண்டு அன்னூர் நோக்கிச் சென்றுள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாகப் பணம் எங்கோ கீழே விழுந்துள்ளது. இதனை அறியாத அருண் பிரகாஷ் அலுவலகம் சென்று பார்த்த பொழுது பணம் கீழே விழுந்தது தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து தான் வந்த வழிநெடுகிலும் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. இதனையடுத்து அன்னூர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.

அதே நேரத்தில் சிறுமுகை நால்ரோடு காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் (வயது 23). இவர் மசாலா பொடிகள் விற்பனை செய்யும் நிறுவனத்தின் விற்பனை பிரதிநிதியாக பணிபுரிந்து வருகிறார்.

இவர் அன்னூர் பகுதியில் வந்து கொண்டிருந்த பொழுது கீழே பணம் கட்டாகக் கிடப்பதைக் கண்டுள்ளார். இதனையடுத்து அதனை எடுத்த பிரகாஷ் நேரடியாக அன்னூர் காவல் நிலையம் வந்து போலீசாரிடம் ஒப்படைத்தார்.

போலீசார் உரிய விசாரணைக்குப் பின்னர் பேரூராட்சி அலுவலர் அருண் பிரகாஷிடம் ஒப்படைத்தனர்.

கீழே கிடந்த ரூ.8070 ஐ நேர்மையாகக் காவல் துறையினரிடம் ஒப்படைத்த விற்பனை பிரதிநிதியான பிரகாஷ்-க்கு காவல் துறையினர் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...