கோவையில் புத்தாண்டு கொண்டாட்டம்- பாதுகாப்பு பணியில் 1,050 போலீஸார்

புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு கோவையில் 1,050 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என்று கோவை மாநகர காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.


கோவை: புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு கோவையில் 1,050 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என்று கோவை மாநகர காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து கோவை மாநகர காவல்துறை வெளியிட்ட செய்தி:-

புத்தாண்டு கொண்டாட்டங்களின்போது மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும். வணிக வளாகங்கள், உள்ளரங்கு பொழுதுபோக்கு இடங்கள் உள்ளிட்டவற்றில் பார்வையாளர்களுக்கான பதிவேடுகள் பராமரிக்க வேண்டும், உடல் வெப்பநிலை பரிசோதித்த பின்னரே மக்களை அனுமதிக்க வேண்டும்.

கோவை மாநகர காவல் துறையானது மக்கள் அதிகம் கூடும் 9-இடங்கள், 13-முக்கிய சந்திப்புகள், 66-வழிபாட்டுத் தலங்கள் ஆகியவற்றைக் கண்டறிந்து பாதுகாப்பைப் பலப்படுத்தியுள்ளது.

புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு, அவிநாசி சாலை, திருச்சி சாலை, பொள்ளாச்சி, தடாகம், பாலக்காடு சாலைகள், ரேஸ்கோா்ஸ் சாலை, மருதமலை, சத்தியமங்கலம் சாலை உள்ளிட்டவற்றில் ரோந்துப் பணிகள் மற்றும் பாதுகாப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

வெளியூரிலிருந்து நகருக்குள் நுழையும் 11-இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு நகருக்குள் வரும் அனைத்து வாகனங்கள் மற்றும் வெளியாட்கள் கண்காணிக்கப்பட உள்ளார்கள். இதுதவிர 44-இருசக்கர ரோந்து வாகனங்கள், 23-நான்கு சக்கர ரோந்து வாகனங்கள் ரோந்துப் பணியில் ஈடுபட உள்ளன.

பிரச்சினைகள் ஏற்படுத்துபவர்கள் குறிப்பாகப் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுபவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும். வாகன விபத்து உள்ளிட்ட அசம்பாவித சம்பவங்களில் பாதிக்கப்படுவோரை மீட்க நகரின் முக்கிய இடங்களில் 45-ஆம்புலன்ஸ்கள் நிறுத்தப்படும்.

பாதுகாப்புப் பணியில் 1,050 போலீஸாா் ஈடுபடுத்தப்பட உள்ளனர். புகார்கள் குறித்து பொதுமக்கள், கட்டுப்பாட்டு அறை: 0422-2300970, 81900-00100, வாட்ஸ் ஆப்: 94981-81213 என்ற எண்களில் தகவல் தெரிவிக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளனர்.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...