கோவையில் புத்தாண்டு கொண்டாட்டம்- பாதுகாப்பு பணியில் 1,050 போலீஸார்

புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு கோவையில் 1,050 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என்று கோவை மாநகர காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.


கோவை: புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு கோவையில் 1,050 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என்று கோவை மாநகர காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து கோவை மாநகர காவல்துறை வெளியிட்ட செய்தி:-

புத்தாண்டு கொண்டாட்டங்களின்போது மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும். வணிக வளாகங்கள், உள்ளரங்கு பொழுதுபோக்கு இடங்கள் உள்ளிட்டவற்றில் பார்வையாளர்களுக்கான பதிவேடுகள் பராமரிக்க வேண்டும், உடல் வெப்பநிலை பரிசோதித்த பின்னரே மக்களை அனுமதிக்க வேண்டும்.

கோவை மாநகர காவல் துறையானது மக்கள் அதிகம் கூடும் 9-இடங்கள், 13-முக்கிய சந்திப்புகள், 66-வழிபாட்டுத் தலங்கள் ஆகியவற்றைக் கண்டறிந்து பாதுகாப்பைப் பலப்படுத்தியுள்ளது.

புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு, அவிநாசி சாலை, திருச்சி சாலை, பொள்ளாச்சி, தடாகம், பாலக்காடு சாலைகள், ரேஸ்கோா்ஸ் சாலை, மருதமலை, சத்தியமங்கலம் சாலை உள்ளிட்டவற்றில் ரோந்துப் பணிகள் மற்றும் பாதுகாப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

வெளியூரிலிருந்து நகருக்குள் நுழையும் 11-இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு நகருக்குள் வரும் அனைத்து வாகனங்கள் மற்றும் வெளியாட்கள் கண்காணிக்கப்பட உள்ளார்கள். இதுதவிர 44-இருசக்கர ரோந்து வாகனங்கள், 23-நான்கு சக்கர ரோந்து வாகனங்கள் ரோந்துப் பணியில் ஈடுபட உள்ளன.

பிரச்சினைகள் ஏற்படுத்துபவர்கள் குறிப்பாகப் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுபவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும். வாகன விபத்து உள்ளிட்ட அசம்பாவித சம்பவங்களில் பாதிக்கப்படுவோரை மீட்க நகரின் முக்கிய இடங்களில் 45-ஆம்புலன்ஸ்கள் நிறுத்தப்படும்.

பாதுகாப்புப் பணியில் 1,050 போலீஸாா் ஈடுபடுத்தப்பட உள்ளனர். புகார்கள் குறித்து பொதுமக்கள், கட்டுப்பாட்டு அறை: 0422-2300970, 81900-00100, வாட்ஸ் ஆப்: 94981-81213 என்ற எண்களில் தகவல் தெரிவிக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளனர்.

Newsletter

வீ த லீடர்ஸ் சார்பில் போதை ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக டர்ஃப் கிரிக்கெட் போட்டி

வீ த லீடர்ஸ் பெரியநாயக்கன்பாளையம் மேற்கு ஒன்றியம் சார்பாக போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்ப...

Tourist Entry Restricted due to flooding in Athirappilly Waterfalls for the third consecutive day

Continuous heavy rainfall over the Western Ghats has left the Athirappilly Waterfalls in spate for the third consecutive...

வெள்ளலூரில் ரூ.46 இலட்சம் செலவில் வீடில்லா நாய்களுக்கான கருத்தடை மையம்: மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு வளாகத்தில் 15வது மத்திய நிதிக்குழு மானிய...

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...