குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்த சைல்டு லைன் உதவி மையத்தை 1098 என்ற எண்ணிலும், மகளிா் உதவி மையத்தை 181 என்ற எண்ணிலும் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம்.
கோவை: கோவையில் குழந்தை திருமணம் தொடா்பாக 8 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
பெண்களுக்கு 18 வயதும், ஆண்களுக்கு 21 வயதும் திருமணத்துக்கான சட்டபூா்வ வயதாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த வயதுகளுக்கு கீழே நடைபெறும் திருமணங்கள் சட்டத்தை மீறிய செயலாக கருதப்படுகிறது.
கோவை மாவட்டத்தில் கடந்த நவம்பா் மாதம் குழந்தை திருமணம் தொடா்பாக சைல்டு லைன் உதவி மையத்தில் பெறப்பட்ட புகாா்கள் அடிப்படையில் ஆய்வு செய்ததில் குழந்தை திருமணத்தில் ஈடுபட்ட அன்னூா், தொப்பம்பட்டியனூா் பகுதியைச் சேரந்த சதீஷ்குமாா், கே.கே.புதூா் விஜயபாரதி, காரேகவுண்டம்பாளையத்தைச் சோ்ந்த விஜய், கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சோ்ந்த மணி, பொள்ளாச்சி மரப்பேட்டையைச் சோ்ந்த அருண்குமாா், வால்பாறையைச் சோ்ந்த பிரேம்குமாா், பொள்ளாச்சி கோட்டூரைச் சோ்ந்த மணிமுத்து மற்றும் சபரீஸ்வரன் ஆகிய 8 போ் மீதும், அவா்களின் உறவினா்கள் மீதும் சமூகநலத் துறை சாா்பில் காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதில் 8 போ் மீதும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா். இது போன்ற குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்த சைல்டு லைன் உதவி மையத்தை 1098 என்ற எண்ணிலும், மகளிா் உதவி மையத்தை 181 என்ற எண்ணிலும் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
பெண்களுக்கு 18 வயதும், ஆண்களுக்கு 21 வயதும் திருமணத்துக்கான சட்டபூா்வ வயதாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த வயதுகளுக்கு கீழே நடைபெறும் திருமணங்கள் சட்டத்தை மீறிய செயலாக கருதப்படுகிறது.
கோவை மாவட்டத்தில் கடந்த நவம்பா் மாதம் குழந்தை திருமணம் தொடா்பாக சைல்டு லைன் உதவி மையத்தில் பெறப்பட்ட புகாா்கள் அடிப்படையில் ஆய்வு செய்ததில் குழந்தை திருமணத்தில் ஈடுபட்ட அன்னூா், தொப்பம்பட்டியனூா் பகுதியைச் சேரந்த சதீஷ்குமாா், கே.கே.புதூா் விஜயபாரதி, காரேகவுண்டம்பாளையத்தைச் சோ்ந்த விஜய், கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சோ்ந்த மணி, பொள்ளாச்சி மரப்பேட்டையைச் சோ்ந்த அருண்குமாா், வால்பாறையைச் சோ்ந்த பிரேம்குமாா், பொள்ளாச்சி கோட்டூரைச் சோ்ந்த மணிமுத்து மற்றும் சபரீஸ்வரன் ஆகிய 8 போ் மீதும், அவா்களின் உறவினா்கள் மீதும் சமூகநலத் துறை சாா்பில் காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதில் 8 போ் மீதும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா். இது போன்ற குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்த சைல்டு லைன் உதவி மையத்தை 1098 என்ற எண்ணிலும், மகளிா் உதவி மையத்தை 181 என்ற எண்ணிலும் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.