கல்லூரி மாணவர்களை குறி வைத்து கோவையில் கொடிகட்டி பறக்கும் கஞ்சா விற்பனை

கோவையில் கல்லூரி மாணவர்களை குறி வைத்து பல்வேறு இடங்களில் கஞ்சா விற்பனை செய்த வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: கோவையில் கல்லூரி மாணவர்களை குறி வைத்து பல்வேறு இடங்களில் கஞ்சா விற்பனை செய்த வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை பீளமேடு போலீசார் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையில், ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது ஆவாரம்பாளையம் சாலை பகுதியில் உள்ள தனியார் கல்லூரி அருகே சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த வாலிபர்களைப் பிடித்து சோதனை நடத்தினர்.

அப்போது அவர்களிடம் கஞ்சா பொட்டலங்கள் விற்பனைக்கு இருந்தது தெரிய வந்தது. தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், பிடிபட்ட நபர் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஆனந்தன் என்பவரின் மகன் மார்சல் (28), தேனி மாவட்டம் கம்பத்தைச் சேர்ந்த முருகேசன் என்பவரின் மகன் ஈஸ்வரன் (25), மற்றும் தேனி மாவட்டம் உத்தம பாளையத்தில் சேர்ந்த ஈஸ்வரன் என்பவரின் மகன் வல்லரசு (23), என்பது தெரியவந்தது.

மேலும், மூவரும் கோவை பீளமேடு சேரன் மாநகர் பகுதியில், அறை எடுத்துத் தங்கி இருந்ததும் தெரியவந்தது. அதேபோல அவர்கள் தேனி மாவட்டத்திலிருந்து கஞ்சாவை கடத்தி வந்து கல்லூரி மாணவர்களைக் குறி வைத்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. தொடர்ந்து அவர்களிடம் இருந்து 2-கிலோ 450-கிராம் கஞ்சாவைப் பறிமுதல் செய்த போலீசார் மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதேபோல, சிங்காநல்லூர் போலீசார் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இருகூர் பகுதியில் சந்தேகத்துக்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த வாலிபரைப் பிடித்து சோதனை நடத்தினர். அவரிடம் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவரின் மகன் சிவக்குமார் (25) என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் இருந்த 240-கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.

இதேபோல, பெரியகடை வீதி போலீசார் சப்-இன்ஸ்பெக்டர் சின்னதுரை தலைமையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது உக்கடம் பைபாஸ் சாலையில் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டு இந்த நபரைப் பிடித்து சோதனை நடத்தினர். கஞ்சா விற்றது தெரியவந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில் கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்த முகமது அலி என்பவரின் மகன் அப்துல் காதர் (28) என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் இருந்து 100-கிராம் கஞ்சாவைப் பறிமுதல் செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...