இந்த வழக்கை விசாரித்த நீதிபதி முனிராஜ், ராஜேந்திரனுக்கு இழப்பீடாக ரூபாய் 1.61 லட்சத்தை 7.50 சதவீத வட்டியுடனும், குப்புலட்சுமிக்கு இழப்பீடாக ரூபாய் 13.37 லட்சத்தை 7.50 சதவீத வட்டியுடன் வழங்க உத்தரவிட்டார்.
கோவை: கோவையில் விபத்தில் பாதிக்கப்பட்டு படுகாயமடைந்த தம்பதிக்கு ரூபாய் 14.98 லட்சம் இழப்பீடு வழங்க கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை நஞ்சுண்டாபுரம் பெருமாள் வீதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (65), இவரது மனைவி குப்புலட்சுமி (54), இருவரும் கடந்த 2014 ஜூன் 28-ம் தேதி இரு சக்கர வாகனத்தில் கோவை அரசு மருத்துவமனை அருகே சென்றனர்.
அப்போது, பின்னால் வந்த அரசுப் பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் இருவருக்கும் காயம் ஏற்பட்டது. விபத்து நடந்தபோது ராஜேந்திரன் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து மாதம் 25,000மும், குப்புலட்சுமி தையல்காரர் ஆக வேலை பார்த்து மாதம் 20 ஆயிரமும் வருவாய் ஈட்டி வந்துள்ளனர்.
எனவே, தனக்கு இழப்பீடாக ரூபாய் 5 லட்சம் வழங்கக் கோரி ராஜேந்திரனும், ரூபாய் 8 லட்சம் வழங்கக் கோரி சுப்புலட்சுமியும் கோவை மோட்டார் வாகன விபத்து வழக்குகள் சிறப்பு சார்பு நீதிமன்றத்தில் தனித்தனியே மனு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி முனிராஜ் ராஜேந்திரனுக்கு இழப்பீடாக ரூபாய் 1.61 லட்சத்தை 7.50 சதவீத வட்டியுடனும், குப்புலட்சுமிக்கு இழப்பீடாக ரூபாய் 13.37 லட்சத்தை 7.50 சதவீத வட்டியுடன் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கோவை கோட்ட நிர்வாக இயக்குனர் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.
கோவை நஞ்சுண்டாபுரம் பெருமாள் வீதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (65), இவரது மனைவி குப்புலட்சுமி (54), இருவரும் கடந்த 2014 ஜூன் 28-ம் தேதி இரு சக்கர வாகனத்தில் கோவை அரசு மருத்துவமனை அருகே சென்றனர்.
அப்போது, பின்னால் வந்த அரசுப் பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் இருவருக்கும் காயம் ஏற்பட்டது. விபத்து நடந்தபோது ராஜேந்திரன் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து மாதம் 25,000மும், குப்புலட்சுமி தையல்காரர் ஆக வேலை பார்த்து மாதம் 20 ஆயிரமும் வருவாய் ஈட்டி வந்துள்ளனர்.
எனவே, தனக்கு இழப்பீடாக ரூபாய் 5 லட்சம் வழங்கக் கோரி ராஜேந்திரனும், ரூபாய் 8 லட்சம் வழங்கக் கோரி சுப்புலட்சுமியும் கோவை மோட்டார் வாகன விபத்து வழக்குகள் சிறப்பு சார்பு நீதிமன்றத்தில் தனித்தனியே மனு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி முனிராஜ் ராஜேந்திரனுக்கு இழப்பீடாக ரூபாய் 1.61 லட்சத்தை 7.50 சதவீத வட்டியுடனும், குப்புலட்சுமிக்கு இழப்பீடாக ரூபாய் 13.37 லட்சத்தை 7.50 சதவீத வட்டியுடன் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கோவை கோட்ட நிர்வாக இயக்குனர் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.