கோவையில் விபத்தில் பாதிக்கப்பட்டு படுகாயமடைந்த தம்பதிக்கு ரூ. 14.98 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு..!

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி முனிராஜ், ராஜேந்திரனுக்கு இழப்பீடாக ரூபாய் 1.61 லட்சத்தை 7.50 சதவீத வட்டியுடனும், குப்புலட்சுமிக்கு இழப்பீடாக ரூபாய் 13.37 லட்சத்தை 7.50 சதவீத வட்டியுடன் வழங்க உத்தரவிட்டார்.


கோவை: கோவையில் விபத்தில் பாதிக்கப்பட்டு படுகாயமடைந்த தம்பதிக்கு ரூபாய் 14.98 லட்சம் இழப்பீடு வழங்க கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை நஞ்சுண்டாபுரம் பெருமாள் வீதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (65), இவரது மனைவி குப்புலட்சுமி (54), இருவரும் கடந்த 2014 ஜூன் 28-ம் தேதி இரு சக்கர வாகனத்தில் கோவை அரசு மருத்துவமனை அருகே சென்றனர்.

அப்போது, பின்னால் வந்த அரசுப் பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் இருவருக்கும் காயம் ஏற்பட்டது. விபத்து நடந்தபோது ராஜேந்திரன் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து மாதம் 25,000மும், குப்புலட்சுமி தையல்காரர் ஆக வேலை பார்த்து மாதம் 20 ஆயிரமும் வருவாய் ஈட்டி வந்துள்ளனர்.

எனவே, தனக்கு இழப்பீடாக ரூபாய் 5 லட்சம் வழங்கக் கோரி ராஜேந்திரனும், ரூபாய் 8 லட்சம் வழங்கக் கோரி சுப்புலட்சுமியும் கோவை மோட்டார் வாகன விபத்து வழக்குகள் சிறப்பு சார்பு நீதிமன்றத்தில் தனித்தனியே மனு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி முனிராஜ் ராஜேந்திரனுக்கு இழப்பீடாக ரூபாய் 1.61 லட்சத்தை 7.50 சதவீத வட்டியுடனும், குப்புலட்சுமிக்கு இழப்பீடாக ரூபாய் 13.37 லட்சத்தை 7.50 சதவீத வட்டியுடன் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கோவை கோட்ட நிர்வாக இயக்குனர் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...