பொள்ளாச்சியில் இறந்த நிலையில் மீட்கப்பட்ட கூலித்தொழிலாளியின் சாவில் மர்மம் உள்ளதாக புகார் மனு

பொள்ளாச்சி அருகே தடுப்பணையில் இறந்த நிலையில் மீட்கப்பட்ட கூலித்தொழிலாளியின் சாவில் மர்மம் இருப்பதாகக் கூறி உறவினர்கள் காவல் துறை துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.


கோவை: பொள்ளாச்சி அருகே தடுப்பணையில் இறந்த நிலையில் மீட்கப்பட்ட கூலித்தொழிலாளியின் சாவில் மர்மம் இருப்பதாகக் கூறி உறவினர்கள் காவல் துறை துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.

பொள்ளாச்சி அருகே உள்ள கொள்ளுபாளையம் கிராமத்தைச் சேர்ந்த வீரன் என்பவரது மகன் ஆறுச்சாமி. இவர் அப்பகுதியில் உள்ள சின்னத்தங்கம் கவுண்டர் என்பவர் தோட்டத்தில் தங்கி கூலி வேலை செய்து வருகிறார். இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை வேலைக்குச் சென்றவர் திரும்பவில்லை.

இந்நிலையில், நேற்று கொள்ளுபாளையம் அருகே உள்ள தடுப்பணை தண்ணீரில் ஆறுச்சாமி இறந்த நிலையில், உடல் மிதப்பதாக அப்பகுதி மக்கள் கொடுத்த தகவலையடுத்து அங்கு விரைந்த கோமங்கலம் போலீசார் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.



அவர் உடலில் காயங்கள் இருந்ததால் அவரது இறப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி இன்று ஆறுச்சாமியின் தாயார் மற்றும் உறவினர்கள் பொள்ளாச்சிகாவல்துறை துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.

ஆறுச்சாமி குடிபோதையில் தவறி விழுந்து நீரில் மூழ்கி இறந்ததாக காவல்துறையினர் தெரிவித்து உள்ளார்கள். இரண்டு தினங்களாக அவர் வேலைக்கு வரவில்லை என்று தோட்டத்து உரிமையாளர் தகவல் தெரிவிக்கவில்லை இறந்தவருக்கு நீச்சல் நன்றாகத் தெரியும் அவர் நீரில் மூழ்கி இருக்க வாய்ப்பில்லை.

எனவே அவர் இறப்பில் சந்தேகம் உள்ளது. அவரது உடல் கூறு ஆய்வை வீடியோ பதிவு செய்து சாவுக்கு நீதி வழங்க வேண்டும் என்றும், இல்லையென்றால் உடலை வாங்க மாட்டோம் என்றும் தெரிவித்துள்ளனர்.

Newsletter

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...