கோவையில் துணிக்கடையில் விலை உயர்ந்த செல்போன் திருடிச் சென்ற தம்பதியினர்..! போலீசார் விசாரணை

துணி வாங்கிய பையை செல்போன் மீது வைத்து யாரும் கவனிக்காதபடி செல்போனை திருடும் காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது.



கோவை: கோவையில் உள்ள துணிக்கடையில் தம்பதியினர் விலை உயர்ந்த செல்போனை யாரும் கவனிக்காதபடி திருடிச் சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை டவுன்ஹால் பகுதியில் துணிக்கடை நடத்தி வருபவர் ராஜா. இவரது கடைக்கு நேற்று துணிவாங்க தம்பதியினர் வந்துள்ளனர்.

அவர்கள் கடையில் துணி வாங்கிய பின்னர், துணிக்கு பில் கொடுக்க மேஜையின் அருகே வந்து நின்ற போது, மேஜையின் மீது சார்ஜ் போட்டு வைக்கப்பட்டிருந்த விலை உயர்ந்த செல்போன் ஒன்றை யாரும் கவனிக்காதபடி திருடிச் சென்றனர்.



இந்நிலையில், தம்பதியினர் கடையில் இருந்து சென்ற சிறிது நேரத்தில் செல்போன் மாயமானதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த கடை உரிமையாளர் ராஜா சிசிடிவி காட்சிகளை பார்வையிட்டார்.

அப்போது, துணி வாங்கிய பையை செல்போன் மீது வைத்து யாரும் கவனிக்காதபடி செல்போனை திருடும் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது.



இதனைத் தொடர்ந்து, கடை உரிமையாளர் ராஜா இது குறித்து உக்கடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து அந்த தம்பதியினரை போலீசார் தேடி வருகின்றனர்.

Newsletter

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...