வரும் ஜனவரி 12ம் தேதி வரை நடைபெறும் இந்த கண்காட்சியில் பல்வேறு ரக புடவைகள், போர்வைகள் வேஷ்டிகள் துண்டுகள் ஆகியவை 30 சதவீத தள்ளுபடியுடன் விற்பனை செய்யப்படுகிறது.
கோவை: கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணிநூல் துறை விற்பனை கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.

இந்திய அரசு ஜவுளித்துறை மற்றும் தமிழ்நாடு அரசு கைத்தறித் துறை இணைந்து நடத்தும் கைத்தறி கண்காட்சி பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, கோவையில் மாவட்டத்தில் அவினாசி சாலையில் உள்ள தனியார் ஹாலில்(மீனாட்சி ஹால்) இன்று முதல் இக்கண்காட்சி நடைபெறுகிறது. இதனை மாவட்ட ஆட்சியர் சமீரன் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து பார்வையிட்டார்.
மேலும் அங்குள்ள பணியாளர்களிடம் விற்பனை செய்யப்படும் துணிகள் குறித்து கேட்டறிந்தார். இந்த கண்காட்சியில் கோவை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள சுமார் 40 சங்கங்கள் பங்கேற்றுள்ளனர்.

அதில் சிறுமுகைப்புதூர் ஸ்ரீ ராமலிங்க செளடாம்பிகை நெசவாளர்களின் தேசிய விருது பெற்ற 6.20 மீட்டரில் திருவள்ளுவர் மற்றும் திருக்குறள்கள் அச்சிடப்பட்ட சில்க் புடவையும், 1 லட்சத்து 64 ஆயிரத்து 492 வண்ணங்களும், மீனாட்சி அம்மன் கோவில் உட்பட 7 உலக அதிசயங்கள் அச்சிடப்பட்ட புடவையும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

வரும் ஜனவரி 12ம் தேதி வரை நடைபெறும் இந்த கண்காட்சியில் பல்வேறு ரக புடவைகள், போர்வைகள் வேஷ்டிகள் துண்டுகள் ஆகியவை 30% தள்ளுபடியுடன் விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு அனுமதி இலவசம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.



இந்திய அரசு ஜவுளித்துறை மற்றும் தமிழ்நாடு அரசு கைத்தறித் துறை இணைந்து நடத்தும் கைத்தறி கண்காட்சி பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, கோவையில் மாவட்டத்தில் அவினாசி சாலையில் உள்ள தனியார் ஹாலில்(மீனாட்சி ஹால்) இன்று முதல் இக்கண்காட்சி நடைபெறுகிறது. இதனை மாவட்ட ஆட்சியர் சமீரன் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து பார்வையிட்டார்.
மேலும் அங்குள்ள பணியாளர்களிடம் விற்பனை செய்யப்படும் துணிகள் குறித்து கேட்டறிந்தார். இந்த கண்காட்சியில் கோவை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள சுமார் 40 சங்கங்கள் பங்கேற்றுள்ளனர்.
அதில் சிறுமுகைப்புதூர் ஸ்ரீ ராமலிங்க செளடாம்பிகை நெசவாளர்களின் தேசிய விருது பெற்ற 6.20 மீட்டரில் திருவள்ளுவர் மற்றும் திருக்குறள்கள் அச்சிடப்பட்ட சில்க் புடவையும், 1 லட்சத்து 64 ஆயிரத்து 492 வண்ணங்களும், மீனாட்சி அம்மன் கோவில் உட்பட 7 உலக அதிசயங்கள் அச்சிடப்பட்ட புடவையும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
வரும் ஜனவரி 12ம் தேதி வரை நடைபெறும் இந்த கண்காட்சியில் பல்வேறு ரக புடவைகள், போர்வைகள் வேஷ்டிகள் துண்டுகள் ஆகியவை 30% தள்ளுபடியுடன் விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு அனுமதி இலவசம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.