கோவையில் தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணிநூல் துறை விற்பனை கண்காட்சி..! மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்..!!

வரும் ஜனவரி 12ம் தேதி வரை நடைபெறும் இந்த கண்காட்சியில் பல்வேறு ரக புடவைகள், போர்வைகள் வேஷ்டிகள் துண்டுகள் ஆகியவை 30 சதவீத தள்ளுபடியுடன் விற்பனை செய்யப்படுகிறது.


கோவை: கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணிநூல் துறை விற்பனை கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.



இந்திய அரசு ஜவுளித்துறை மற்றும் தமிழ்நாடு அரசு கைத்தறித் துறை இணைந்து நடத்தும் கைத்தறி கண்காட்சி பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, கோவையில் மாவட்டத்தில் அவினாசி சாலையில் உள்ள தனியார் ஹாலில்(மீனாட்சி ஹால்) இன்று முதல் இக்கண்காட்சி நடைபெறுகிறது. இதனை மாவட்ட ஆட்சியர் சமீரன் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து பார்வையிட்டார்.

மேலும் அங்குள்ள பணியாளர்களிடம் விற்பனை செய்யப்படும் துணிகள் குறித்து கேட்டறிந்தார். இந்த கண்காட்சியில் கோவை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள சுமார் 40 சங்கங்கள் பங்கேற்றுள்ளனர்.



அதில் சிறுமுகைப்புதூர் ஸ்ரீ ராமலிங்க செளடாம்பிகை நெசவாளர்களின் தேசிய விருது பெற்ற 6.20 மீட்டரில் திருவள்ளுவர் மற்றும் திருக்குறள்கள் அச்சிடப்பட்ட சில்க் புடவையும், 1 லட்சத்து 64 ஆயிரத்து 492 வண்ணங்களும், மீனாட்சி அம்மன் கோவில் உட்பட 7 உலக அதிசயங்கள் அச்சிடப்பட்ட புடவையும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.



வரும் ஜனவரி 12ம் தேதி வரை நடைபெறும் இந்த கண்காட்சியில் பல்வேறு ரக புடவைகள், போர்வைகள் வேஷ்டிகள் துண்டுகள் ஆகியவை 30% தள்ளுபடியுடன் விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு அனுமதி இலவசம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.





Newsletter

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...