அன்னூர் பகுதிகளில் தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்படுவதும், அவர்களிடமிருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்படுவதும் குறிப்பிடத்தக்கது.
கோவை: கோவை அன்னூர் அருகே சட்டவிரோதமாக கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்ததாக வடமாநில இளைஞர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டு, 6 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள பசூர் கிராமத்தில் ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளன. இந்த தொழிற்சாலைகளில் வடமாநிலங்களை சேர்ந்த இளைஞர்கள் அதிகளவில் பணிபுரிந்து வரும் நிலையில், அவர்களை குறிவைத்து சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட கஞ்சா விற்பனை நடைபெறுவதாக மாவட்ட எஸ்.பி.செல்வநாகரத்தினத்திற்கு ரகசிய தகவல் வந்துள்ளது.
இந்த தகவலின் பேரில், அன்னூர் காவல் ஆய்வாளர் நித்யா தலைமையிலான போலீசார் அந்த பகுதியில் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது, அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றிருந்த இரு இளைஞர்களை காவல் நிலையம் அழைத்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இதையடுத்து, போலீசாரின் விசாரணையில் பரமக்குடியை சேர்ந்த பாலமுருகன் மற்றும் ஒடிசாவை சேர்ந்த லோக்பால் மகனந்தா என்ற இருவரும், சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதனையடுத்து, அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ஆறு கிலோ கஞ்சா மற்றும் ரூ. 3 ஆயிரம் பணத்தையும் பறிமுதல் செய்தனர். பின்னர், அன்னூர் போலீசார் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
அன்னூர் பகுதிகளில் தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்படுவதும், அவர்களிடமிருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்படுவதும் குறிப்பிடத்தக்கது.
கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள பசூர் கிராமத்தில் ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளன. இந்த தொழிற்சாலைகளில் வடமாநிலங்களை சேர்ந்த இளைஞர்கள் அதிகளவில் பணிபுரிந்து வரும் நிலையில், அவர்களை குறிவைத்து சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட கஞ்சா விற்பனை நடைபெறுவதாக மாவட்ட எஸ்.பி.செல்வநாகரத்தினத்திற்கு ரகசிய தகவல் வந்துள்ளது.
இந்த தகவலின் பேரில், அன்னூர் காவல் ஆய்வாளர் நித்யா தலைமையிலான போலீசார் அந்த பகுதியில் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது, அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றிருந்த இரு இளைஞர்களை காவல் நிலையம் அழைத்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இதையடுத்து, போலீசாரின் விசாரணையில் பரமக்குடியை சேர்ந்த பாலமுருகன் மற்றும் ஒடிசாவை சேர்ந்த லோக்பால் மகனந்தா என்ற இருவரும், சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதனையடுத்து, அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ஆறு கிலோ கஞ்சா மற்றும் ரூ. 3 ஆயிரம் பணத்தையும் பறிமுதல் செய்தனர். பின்னர், அன்னூர் போலீசார் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
அன்னூர் பகுதிகளில் தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்படுவதும், அவர்களிடமிருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்படுவதும் குறிப்பிடத்தக்கது.