கோவை மதுக்கரையை அடுத்த அறிவொளி நகர் பகுதியைச் சேர்ந்த மயில்சாமி (32) என்பவர் பாம்பு கடித்து பலியானார்.
கோவை மதுக்கரையை அடுத்த அறிவொளி நகர் பகுதியைச் சேர்ந்த மயில்சாமி (32), பெயிண்டர் ஆன இவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்தார்.
நேற்று அதிகாலை இவரது வீட்டிற்குள் பாம்பு ஒன்று புகுந்தது. அந்த சமயத்தில் குடிபோதையில் இருந்த மயில்சாமி, அந்த பாம்பை பிடித்து வீட்டிற்கு வெளியே கொண்டு போய் விட்டார். அப்போது, எதிர்பாரதவிதமாக அந்த பாம்பு, மயில்சாமியை கடித்தது.
இதையடுத்து, மயில்சாமி சிறிது நேரத்தில் வாயில் நுரை தள்ளியபடி மயங்கி விழுந்தார். இதை பார்த்த, அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்நிலையில், சிகிச்சை பலன் அளிக்காமல் மயில்சாமி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து அவரது மனைவி, யோகசுந்தரி மதுக்கரை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நேற்று அதிகாலை இவரது வீட்டிற்குள் பாம்பு ஒன்று புகுந்தது. அந்த சமயத்தில் குடிபோதையில் இருந்த மயில்சாமி, அந்த பாம்பை பிடித்து வீட்டிற்கு வெளியே கொண்டு போய் விட்டார். அப்போது, எதிர்பாரதவிதமாக அந்த பாம்பு, மயில்சாமியை கடித்தது.
இதையடுத்து, மயில்சாமி சிறிது நேரத்தில் வாயில் நுரை தள்ளியபடி மயங்கி விழுந்தார். இதை பார்த்த, அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்நிலையில், சிகிச்சை பலன் அளிக்காமல் மயில்சாமி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து அவரது மனைவி, யோகசுந்தரி மதுக்கரை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.