DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு கோரிய மனு; இந்து மக்கள் கட்சிக்கு கடும் கண்டனம்.

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி இந்து மக்கள் கட்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (DYFI) கடுமையாக கண்டித்துள்ளது. வேலைவாய்ப்பு கோரி நடத்தப்பட்ட ஜனநாயகப் போராட்டத்தை திரித்து அரசியல் செய்ய முயற்சிப்பதாக DYFI குற்றம்சாட்டியுள்ளது.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியரிடம் இந்து மக்கள் கட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டு, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (DYFI) நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதற்கு DYFI கோவை மாவட்டக் குழு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மாவட்டத் தலைவர் ஏ.என். ராஜா மற்றும் மாவட்டச் செயலாளர் எம். தினேஷ் ராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்கள் ஒற்றுமை, சமூக நல்லிணக்கம் மற்றும் அமைதியைப் பாதுகாக்க தொடர்ந்து செயல்பட்டு வரும் ஜனநாயக அமைப்புகள் மீது திட்டமிட்டு களங்கம் ஏற்படுத்தும் முயற்சிகள் கண்டனத்திற்குரியவை என்று தெரிவித்துள்ளனர்.

அரசியல் சாசனத்தின் அடிப்படை விழுமியங்களை மதிக்காமல், வெறுப்புணர்வையும் காழ்ப்புணர்ச்சியையும் தூண்டும் வகையில் இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

அண்மையில் DYFI சார்பில் நடத்தப்பட்ட போராட்டம், ஒன்றிய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள லட்சக்கணக்கான பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பதையும், கோவை மாவட்ட இளைஞர்களின் வேலைவாய்ப்பு உரிமையைப் பாதுகாக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தி நடைபெற்ற ஜனநாயகப் போராட்டம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளைஞர்களின் வேலைவாய்ப்பு, மக்களின் வாழ்வாதாரம் மற்றும் சமூக நலன் தொடர்பான கோரிக்கைகளை முன்னிறுத்தி நடைபெற்ற போராட்டத்தை திரித்துக் கூறி, அவதூறு பரப்பும் நோக்கில் வழக்குப் பதிவு செய்யக் கோருவது ஜனநாயக விரோத நடவடிக்கை என்றும் DYFI தெரிவித்துள்ளது.

மேலும், வேலைவாய்ப்பு கேட்பது குற்றமல்ல என்றும், காலிப்பணியிடங்களை நிரப்பாமல் இளைஞர்களின் எதிர்காலத்தை பறிப்பதே மக்களுக்கு எதிரான செயல் என்றும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

மக்களின் பிரச்சினைகளுக்காக குரல் கொடுக்கும் இயக்கங்களை மிரட்டல்களாலும், பொய்யான குற்றச்சாட்டுகளாலும் முடக்க முடியாது என்றும், மக்கள் நலன், சமூக நீதி, மதச்சார்பின்மை மற்றும் இளைஞர்களின் உரிமைகளுக்காக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் தொடர்ந்து போராடும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

மாநில அளவில் முதலிடம் பெற்ற கோவை மாநகராட்சி: அலுவலர்கள், களப்பணியாளர்களுக்கு மேயர் நன்றி..!

மாநில அளவில் சிறந்த மாநகராட்சிக்கான முதல் பரிசைப் கோவை பெற்றதற்காக, மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், தூய்மைப் பணியாளர...

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு அமைப்பு தொடக்கம்

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு அமைப்பு தொடங்கப்பட்டது. விழாவில் 120-க்கும் மேற்பட்ட மாணவர்கள், பேராசிரிய...

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் பெரும் தீ விபத்து: 100 ஊழியர்கள், 36 வாகனங்களுடன் மாநகராட்சி போராட்டம்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் 3.1 ஏக்கரில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி ஆணையர் தலைமையில் 100 பணியாளர்கள்,...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் இந்திய அறிவு மரபு அடிப்படையில் வரலட்சுமி பூஜை சிறப்பாக நடைபெற்றது

கற்பகம் அகாடமி ஆஃப் ஹையர் எஜுகேஷன் பல்கலைக்கழகத்தின் இசைத்துறை மற்றும் நடனத்துறை சார்பில் வரலட்சுமி பூஜை இந்திய அறிவு மர...

கோவையில் 1,400 போதை மாத்திரைகள், 300 கிராம் கஞ்சா பறிமுதல் - கணவன், மனைவி கைது

கோவைபுதூர் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கணவன், மனைவி இருவரை குனியமுத்தூர் போலீசார் கை...

கோவை வேளாண் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்தில் தொழில்துறை களப்பயணம்

கோவை வேளாண் பொறியியல் கல்லூரியின் 56 B.Tech மாணவர்கள் அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு தொழில்முறை களப்பயணம் மேற்கொண்...