பருத்தி விவசாயிகளைப் போல நூற்பாலைத் துறையினரையும் மத்திய அரசு பாதுகாக்க வேண்டும்: RTF கூட்டமைப்பு வலியுறுத்தல்

பருத்தி விவசாயிகளின் நலனை பாதுகாப்பதில் மத்திய அரசு காட்டும் அக்கறையைப் போலவே, நூற்பாலைத் தொழில்துறையினரின் நலனையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு (Recycling Textile Industries Federation) வலியுறுத்தியுள்ளது.


கோவை: பருத்தி மீதான 11 சதவீத இறக்குமதி வரியை ரத்து செய்துள்ள மத்திய அரசின் நடவடிக்கை வரவேற்கத்தக்கது. எனினும், இந்த வரிவிலக்கு உரிய காலகட்டத்தில் அமல்படுத்தப்பட்டால் மட்டுமே இந்திய ஜவுளித் தொழில்துறைக்கு முழுமையான பலன் கிடைக்கும் என்று மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு (Recycling Textile Industries Federation - RTF) வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து கூட்டமைப்பின் தலைவர் ஜெயபால் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்காவின் பல மாகாணங்களில் இருந்து இந்தியாவுக்கு பருத்தி இறக்குமதி செய்யப்பட்டு வரும் நிலையில், இறக்குமதி செய்ய வேண்டிய காலகட்டத்தில் வரிவிலக்கு வழங்கப்பட்டால் மட்டுமே அது தொழில்துறையினருக்கு பயனளிக்கும் என்றார்.

மேலும், பருத்தி விவசாயிகள் பாதிக்கப்படக் கூடாது என்பதில் மத்திய அரசு காட்டும் அக்கறையைப் போலவே, நூற்பாலைத் தொழில்துறையினரும் பாதிக்கப்படாமல் இருக்க தேவையான கொள்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

இந்தியாவில் தரமான பருத்தி பற்றாக்குறை நிலவுவதால், நூற்பாலைகள் வெளிநாடுகளில் இருந்து பருத்தி இறக்குமதி செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக அவர் தெரிவித்தார். அண்மைக் காலமாக பருத்தி விலை உயர்வு காரணமாக ஜவுளித் துறையின் உற்பத்திச் சங்கிலியில் உள்ள அனைத்து நிறுவனங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பல நிறுவனங்கள் கடனை நம்பி தொழில் நடத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும், முன்னர் 60 நாட்களுக்கு தேவையான பருத்தியை இருப்பு வைக்க போதுமான நிதி வசதிகள் இருந்த நிலையில், தற்போது கடுமையான நிதி நெருக்கடி காரணமாக தேவையான அளவு பருத்தியை கையிருப்பில் வைத்திருக்க முடியாத சூழல் உருவாகியுள்ளதாக தெரிவித்தார்.

பருத்தி விவசாயிகளின் நலனுக்காக குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்கப்படுவதை வரவேற்பதாக தெரிவித்த ஜெயபால், ஜவுளிப் பொருட்கள் உள்ளிட்ட பிற தொழில்துறை உற்பத்திப் பொருட்களுக்கு ஏன் இதுபோன்ற பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படுவதில்லை என்ற கேள்வியையும் எழுப்பினார்.

மேலும், பருத்திக்கான விலையை நிர்ணயிக்கும் போது தரமான பருத்திக்கு ஒரு விலையும், தரம் குறைந்த பருத்திக்கு குறைந்த விலையும் நிர்ணயிக்க வேண்டும் என்றும், அனைத்து வகை பருத்திக்கும் ஒரே விலை நிர்ணயிப்பது ஏற்புடையதல்ல என்றும் அவர் வலியுறுத்தினார்.

Newsletter

Katta Ravi Teja IAS to Assume Charge as New Coimbatore Corporation Commissioner Tomorrow

Katta Ravi Teja, IAS, who has been appointed as the new Commissioner of the Coimbatore City Municipal Corporation, will...

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா ஐஏஎஸ் நாளை பொறுப்பேற்பு

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள கட்டா ரவி தேஜா, ஐஏஎஸ், நாளை (ஜூன் 3) காலை 10.30 மணிக்கு மாநகராட்ச...

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு கோரிய மனு; இந்து மக்கள் கட்சிக்கு கடும் கண்டனம்.

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி இந்து மக்கள் கட்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதை இந்திய ஜனநாயக வ...

பருத்தி விவசாயிகளைப் போல நூற்பாலைத் துறையினரையும் மத்திய அரசு பாதுகாக்க வேண்டும்: RTF கூட்டமைப்பு வலியுறுத்தல்

பருத்தி விவசாயிகளின் நலனை பாதுகாப்பதில் மத்திய அரசு காட்டும் அக்கறையைப் போலவே, நூற்பாலைத் தொழில்துறையினரின் நலனையும் பாத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...