திருப்பூரில் இன்று 1882 பள்ளிகள் திறப்பு..! மாணவர்களை பேண்ட் வாத்தியங்களுடன் வகுப்பறைகளுக்கு அழைத்துச் சென்ற ஆசிரியர்கள்..!!

இன்று முதல் 15 தினங்களுக்கு மாணவர்களுக்கு பாடங்கள் எடுக்காமல் கிராமப் புற விளையாட்டுகள், பாடல், நடனம் ஆகியவை கற்றுத்தர இருப்பதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் இன்று 1882 பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், மாணவர்களுக்கு இனிப்பு, பரிசுப் பொருட்கள் வழங்கி பேண்ட் வாத்தியங்களுடன் வகுப்பறைகளுக்கு ஆசிரியர்கள் அழைத்துச் சென்றனர்.



கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் அடைக்கப்பட்டு இருந்த நிலையில், ஏற்கனவே 9 முதல் 12ம் வகுப்பு வரை மாணவ மாணவிகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், 19 மாதங்களுக்குப் பிறகு இன்று ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவ மாணவிகளுக்கு பள்ளிகள் துவங்கும் என தமிழக அரசு தெரிவித்திருந்தது.

அதனடிப்படையில், இன்று திருப்பூரில் 1882 அரசு மற்றும் அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகள் திறக்கப்பட்டன. முதல் நாளான இன்று மாணவ-மாணவிகளை உற்சாகமாக வரவேற்கும் வகையில் பொம்மை வேடமிட்டு பள்ளிக்கு வந்த மாணவ மாணவிகளுக்கு கடலைமிட்டாய், காகிதத்தால் செய்யப்பட்ட பூங்கொத்து பரிசுப் பொருட்கள் வழங்கி ஆசிரியர்கள் வரவேற்றனர்.



மேலும், மாணவ மாணவிகளுக்கு உற்சாகமூட்டக் கூடிய வகையில் பேண்ட் வாத்தியங்கள் முழங்க மாணவ, மாணவிகளை வகுப்பறைக்கு அழைத்துச் சென்றனர்.

இன்று முதல் 15 தினங்களுக்கு 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவ மாணவிகளுக்கு பாடங்கள் எடுக்காமல் அவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தக்கூடிய வகையில் கிராம புற விளையாட்டுகள் மற்றும் பாடல், நடனம் ஆகியவை கற்றுத்தர இருப்பதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

Newsletter

Katta Ravi Teja IAS to Assume Charge as New Coimbatore Corporation Commissioner Tomorrow

Katta Ravi Teja, IAS, who has been appointed as the new Commissioner of the Coimbatore City Municipal Corporation, will...

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா ஐஏஎஸ் நாளை பொறுப்பேற்பு

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள கட்டா ரவி தேஜா, ஐஏஎஸ், நாளை (ஜூன் 3) காலை 10.30 மணிக்கு மாநகராட்ச...

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு கோரிய மனு; இந்து மக்கள் கட்சிக்கு கடும் கண்டனம்.

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி இந்து மக்கள் கட்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதை இந்திய ஜனநாயக வ...

பருத்தி விவசாயிகளைப் போல நூற்பாலைத் துறையினரையும் மத்திய அரசு பாதுகாக்க வேண்டும்: RTF கூட்டமைப்பு வலியுறுத்தல்

பருத்தி விவசாயிகளின் நலனை பாதுகாப்பதில் மத்திய அரசு காட்டும் அக்கறையைப் போலவே, நூற்பாலைத் தொழில்துறையினரின் நலனையும் பாத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...