கோவை: வால்பாறை குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரியும் கரடிகளால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கோவை: வால்பாறை குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரியும் கரடிகளால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. யானை, சிறுத்தை, புலி, கரடி, காட்டெருமை போன்றவைகள் குடியிருப்புக்கு அருகில் சுற்றித் திரிவதாலும், அவ்வப்போது மனிதர்களை தாக்கி வருவதாலும் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
இந்த நிலையில், வால்பாறை பொதுப் பணித்துறை குடியிருப்பு பகுதியில் இரவு சுமார் 8 மணி அளவில் சாலையில் மூன்று கரடிகள் சுற்றித் திரிந்ததால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர்.
அப்போது, வாகனம் வந்ததால் குட்டியுடன் கரடி தேயிலை தோட்டத்திற்குள் சென்றது. எனவே, வன விலங்குகளிடமிருந்து மக்களை பாதுகாக்க வேண்டும் என்று வனத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. யானை, சிறுத்தை, புலி, கரடி, காட்டெருமை போன்றவைகள் குடியிருப்புக்கு அருகில் சுற்றித் திரிவதாலும், அவ்வப்போது மனிதர்களை தாக்கி வருவதாலும் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
இந்த நிலையில், வால்பாறை பொதுப் பணித்துறை குடியிருப்பு பகுதியில் இரவு சுமார் 8 மணி அளவில் சாலையில் மூன்று கரடிகள் சுற்றித் திரிந்ததால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர்.
அப்போது, வாகனம் வந்ததால் குட்டியுடன் கரடி தேயிலை தோட்டத்திற்குள் சென்றது. எனவே, வன விலங்குகளிடமிருந்து மக்களை பாதுகாக்க வேண்டும் என்று வனத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.