கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.10 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலுப்படுத்தும் இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

கோவை: கோவை:

கோவையில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் தொடர்புடையவர்களுக்கு மொத்தம் ரூ.2.10 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத மரவெட்டுக்கு எதிராக வருவாய்த் துறையினர் எடுத்துள்ள இந்த கடுமையான நடவடிக்கைக்கு பொதுமக்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

கோவை வெரைட்டி ஹால் பகுதியைச் சேர்ந்த சங்கர்லால் என்பவர், தனது இடத்தின் முன்புறம் உள்ள பொது இடத்தில் வளர்ந்திருந்த புங்கை மரத்தை கடந்த ஜூலை 10-ஆம் தேதி அரசு அனுமதியின்றி வெட்டியதாக கூறப்படுகிறது.



இதுகுறித்து Green Care அமைப்பினரும் அப்பகுதி மக்களும் அளித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையின் முடிவில், கோவை தெற்கு வருவாய் கோட்டாட்சியர் மாருதிபிரியா, சங்கர்லாலுக்கு ரூ.1,06,400 அபராதம் விதித்ததுடன், அவரது இடத்தில் 10 மரக்கன்றுகளை நட்டு பராமரிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

மற்றொரு சம்பவத்தில், குனியமுத்தூர் பகுதியில் ஐந்து மரங்களின் கிளைகளை வெட்டுவதற்கு மட்டும் அனுமதி பெற்றிருந்த நிலையில், அனுமதியை மீறி மரங்களின் பெரும்பகுதியை வெட்டியதாகக் கூறப்படும் தனியார் கடை உரிமையாளருக்கு பேரூர் வட்டாட்சியர் ரூ.1,04,000 அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்துள்ளார்.



இதுவரை அனுமதியின்றி மரங்களை வெட்டியவர்களுக்கு குறைந்த அளவிலான அபராதம் மட்டுமே விதிக்கப்பட்டு வந்த நிலையில், இம்முறை அதிக தொகை அபராதம் விதிக்கப்பட்டிருப்பது வரவேற்பைப் பெற்றுள்ளது. குறைந்த அபராதம் விதிக்கப்பட்டால் அதை செலுத்திவிட்டு மீண்டும் இதுபோன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபட வாய்ப்புள்ளதாகவும், கடுமையான அபராதம்தான் மரவெட்டுகளை கட்டுப்படுத்துவதில் பயனளிக்கும் என்றும் பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.



இதுகுறித்து Green Care அமைப்பின் நிறுவனர் சையது கூறுகையில், அதிக அளவிலான அபராதம் விதிக்கப்பட்டால் தான்இதுபோன்ற விதிமீறல்கள் குறையும் என்றார். மேலும், பொது இடங்களில் அனுமதியின்றி மரங்களை வெட்டுபவர்கள் மீது காவல்துறையும் வழக்குப்பதிவு செய்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

Newsletter

மாணவர் அமுதன் மரணம், தமிழகத்தில் அதிகரிக்கும் குற்றங்களை கண்டித்து கோவையில் நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்

கோவை மாணவர் அமுதன் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், தமிழகத்தில் கொலை, கொள்ளை மற...

கோவை நவக்கரை ஏ.ஜே.கே. கல்லூரியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வுடன் சிறப்பான ஓணம் விழா

கோவை நவக்கரையில் உள்ள ஏ.ஜே.கே. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் 14 முதல் 20 வரை ஓணம் விழா கொண்டாடப்பட்டது. போதைப்...

பேரூர் பகுதியில் 1.10 டன் புகையிலை பொருள்கள் பறிமுதல்: ஒருவர் கைது

கோவை மாவட்ட காவல்துறை பேரூர் பகுதியில் சுமார் 1.10 டன் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து ஒருவரை கைது செ...

மசக்காளிபாளையம் நகராட்சிப் பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவிலான கேரம் போட்டியில் முதலிடம்

கோயம்புத்தூர் மாவட்ட அளவில் நடைபெற்ற கேரம் போட்டியில் மசக்காளிபாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவர்கள் ஒற்றையர் மற்று...

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் பொள்ளாச்சி பிரதான சாலையில் முட்புதர் அகற்றும் பணி

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண் 98ல் பொள்ளாச்சி பிரதான சாலை எல்ஐசி காலனி பகுதியில் சாலையோர செடிகள் மற்றும் முட...

கோவை ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி – உயிர் அமைப்பு இடையே சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை வலுப்படுத்த ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மற்றும் உயிர் அமைப்பு இடையே புரிந்துண...