டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும் நிலையில், கோவை நரசிம்மநாயக்கன்பாளையத்தில் உள்ள மதுபான உற்பத்தி ஆலை உட்பட நான்கு இடங்களில் சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கோவை: டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக

தமிழகம் முழுவதும் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் (DVAC) சோதனை நடத்தி வரும் நிலையில், கோவையில் நான்கு இடங்களில் காலை முதல் சோதனை நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, மேட்டுப்பாளையம் சாலை, நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள சிவா டிஸ்டிலரீஸ் பிரைவேட் லிமிடெட் என்ற மதுபான உற்பத்தி ஆலையில், இன்று அதிகாலை 7 மணி முதல் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதே போல, பொள்ளாச்சி, நவக்கரை, பீளமேடு உள்ளிட்ட இடங்களிலும் காலை முதல் சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மூன்று வாகனங்களில் வந்த அதிகாரிகள் ஆலை வளாகத்திற்குள் நுழைந்து ஆவணங்கள் மற்றும் பிற பதிவுகளை ஆய்வு செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்த கூடுதல் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...