மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில், சக தொழிலாளியை தள்ளியதில் அவர் உயிரிழந்த வழக்கில், குணசேகரன் (29) என்பவரை கவுண்டம்பாளையம் போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை: கோவை கவுண்டம்பாளையம் அருகே மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில், சக பெயிண்டிங் தொழிலாளியை தாக்கி கொலை செய்ததாக தலைமறைவாக இருந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் மள்ளங்கிணறு பகுதியைச் சேர்ந்த குணசேகரன் (29) மற்றும் கர்நாடக மாநிலம் பெங்களூரு சாஸ்திராபுரத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் (43) ஆகியோர் பெயிண்டிங் தொழிலாளர்களாக பணியாற்றி வந்தனர்.

இருவரும் கோவை இடையர்பாளையம் பகுதியில் நடைபெற்று வந்த கட்டிடப் பெயிண்டிங் பணிக்காக ஒப்பந்ததாரர் முத்து பாலாஜி மூலம் அழைத்து வரப்பட்டு, பணிபுரிந்த அதே கட்டிடத்தில் தங்கி வேலை செய்து வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த நிலையில், கடந்த ஜூலை 27-ஆம் தேதி இரவு வேலை முடிந்த பின்னர் இருவரும் மது அருந்தியபோது, பணப் பிரச்சினை தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. வாக்குவாதம் முற்றியதில், அருகில் கிடந்த பி.வி.சி. குழாயால் வெங்கடேஷ் குணசேகரனை தாக்கியதாகவும், அதற்கு ஆத்திரமடைந்த குணசேகரன் வெங்கடேஷை பலமாகத் தள்ளியதாகவும் கூறப்படுகிறது.

இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த வெங்கடேஷுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து குணசேகரன் அங்கிருந்து விலகிச் சென்று கட்டிடத்தின் மேல்தள அறையில் தூங்கியதாக கூறப்படுகிறது.

மறுநாள் காலை, அவர்களுடன் பணிபுரிந்த பீகார் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளி ஒருவர் வெங்கடேஷ் ரத்த வெள்ளத்தில் கிடந்ததை கண்டு ஒப்பந்ததாரருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலின் பேரில் கவுண்டம்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்த நிலையில் இருந்த வெங்கடேஷின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

ஒப்பந்ததாரர் முத்து பாலாஜி அளித்த புகாரின் பேரில் BNS 103, 105 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவாக இருந்த குணசேகரனை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...