எஸ்.பி வேலுமணிக்கு ஆதரவாக வானதி சீனிவாசன் அறிக்கை..! இது தான் பிரதமர் மோடி உங்களுக்கு சொல்லிக்கொடுத்த ஊழல் ஒழிப்பா? - அறப்போர் இயக்கம் கேள்வி

கோவை: கடந்த செவ்வாய்கிழமை, அன்று, அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணியின் கோவை சுகுணாபுரம் வீடு உள்பட தமிழகம் முழுவதும் 60 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை நடத்தினார்கள். சோதனையில், பல்வேறு விதமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.


கோவை: கடந்த செவ்வாய்கிழமை, அன்று, அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணியின் கோவை சுகுணாபுரம் வீடு உள்பட தமிழகம் முழுவதும் 60 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை நடத்தினார்கள். சோதனையில், பல்வேறு விதமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், கோவை தெற்கு தொகுதி பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என தெரிவித்திருந்தார். இதுகுறித்து வழக்குத் தொடர்ந்த அறப்போர் இயக்கம், முகநூல் பக்கத்தில் வானதி சீனிவாசனுக்கு காட்டமான பதில் அளித்து விளக்கத்துடன் பதிவிட்டுள்ளனர்.

வானதி சீனிவாசனுக்கு விளக்கம் அளித்து அவர்கள் முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு வருமாறு:-

முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு ஆதரவாக வானதி சீனிவாசன் MLA அவர்கள் கொடுத்துள்ள அறிக்கை ஊழலை ஊக்குவிக்கும் வண்ணம் அமைந்துள்ளது.

அறப்போர் இயக்கம் ஆதாரங்களுடன் 2018ம் வருடம் DVACல் புகார் கொடுத்து பிறகு அந்த புகார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்து தற்பொழுது ரெய்டு நடத்தப்பட்டு வேலுமணி மற்றும் அவரது கூட்டாளிகள் மீது FIR பதியப்பட்டுள்ளது.

ஆனால், வானதி சீனிவாசன் யாரோ ஏற்பாடு செய்து, யாரோ புகார் கொடுத்ததாக அறிக்கை கொடுத்து இருக்கிறார். அறப்போர் இயக்கம் கொடுத்த புகாரின் அடிப்படையில் தான் இந்த FIR போடப்பட்டுள்ளது, என்று அனைத்து செய்திகளிலும் வந்த பிறகும், இவர் யாரை திருப்திப்படுத்த இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்?

அடிப்படை ஆதாரங்கள் இருப்பதாக நீதிமன்றமே ஒப்புக்கொண்ட பிறகு வானதி சீனிவாசன் எந்த அடிப்படையில், இந்த புகாரை கொச்சைபடுத்தி பேசுகிறார்? இது தான் பிரதமர் மோடி உங்களுக்கு சொல்லிக்கொடுத்த ஊழல் ஒழிப்பா?



அப்படி, இந்த வழக்கின் அடிப்படை ஆதாரங்கள் பொய் என்று உங்களுக்கு தெரிந்தால் வாங்களேன், இது குறித்து ஒரு விவாதம் செய்யலாம். நாங்க ரெடி நீங்க ரெடியா வானதி சீனிவாசன்? இவ்வாறு அவர்கள் வானதி சீனிவாசனுக்கு சவால்விட்டு பதில் பதிவு வெளியிட்டுள்ளன.

இது குறித்து எம்எல்ஏ வானதி சீனிவாசன் அவர்களிடம் கருத்து கேட்பதற்காக, கைபேபேசியில் தொடர்புகொண்டோம். அவர் கைபேசியை எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...