கோவை: கோவையில் ஆன்லைன் கல்வி பயிலமுடியாத மலைவாழ் மாணவர்களுக்கு "ஸ்கூல் நெட் இந்தியா" நிறுவனம் உபகரணங்கள் வழங்கியுள்ளது.
கோவை: கோவையில் ஆன்லைன் கல்வி பயிலமுடியாத மலைவாழ் மாணவர்களுக்கு "ஸ்கூல் நெட் இந்தியா" நிறுவனம் உபகரணங்கள் வழங்கியுள்ளது.
கோவை மாவட்டம் கேரள - தமிழக எல்லைப்பகுதி மாவுத்தம்பதி ஊராட்சிக்குட்பட்ட, சின்னாம்பதி பழங்குடியின கிராமத்தில், 80க்கும் மேற்பட்ட குடும்பங்களில் 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் 1 முதல் 8ம் வகுப்பு வரை படிக்கின்றனர்.
இணையதள வகுப்புகள் குறித்து என்ன என்று கேட்கும், இக்குழந்தைகளின் பெற்றோர்களுக்கு பெரிய வசதிகள் இல்லாததால் படிப்பை பாதியில் நிறுத்தியுள்ளனர்.
இந்நிலையில், கொரோனா ஊரடங்கும் அறிவிக்கப்பட்டதால், படிப்பு வாசனையே அறியாத அப்பெற்றோரின் குழந்தைகள், வீதி வீதியாக விளையாடியபடி, பொழுதை கழித்து வந்தனர். இக்குழந்தைகளை திரட்டி, தனது வீட்டையே பள்ளியாக மாற்றினார் அப்பகுதியின் முதல் பட்டதாரியான சந்தியா.
வாசித்தல், எழுதுதல், ஓவியம் வரைதல், கணக்கு போடுவது என ஒற்றை ஆளாக, தனது கிராம குழந்தைகளை வழிநடத்தி வந்தார். இது தொடர்பாக பல்வேறு செய்தி தொலைக்காட்சிகள், சமூக வளைதளங்கள் செய்தி வெளியிட்டு இருந்தன. இதனை அறிந்த "ஸ்கூல் நெட் இந்தியா" என்ற தனியார் நிறுவனம் சி.எஸ்.ஆர் நிதி மூலம் அம்மலைவாழ் மாணவர்களின் கல்வியை கருத்தில் கொண்டு சுமார் ரூ.3லட்சம் மதிப்பிலான கல்வி மற்றும் விளையாட்டு உபகரணங்களை வழங்கியுள்ளது.

சின்னாம்பதி கிராமத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட ஸ்கூல் நெட் இந்தியா நிறுவனத்தின் துணை தலைவர் ராஜேஷ் சோமன், கணிப்பொறி, ஆங்கிலம் பயில "English bolo software", மற்றும் மல்டிமீடியா உள்ளிட்ட காட்சி வாயிலாக பயிலும் விதமாக ஒருங்கிணைந்த k-yan உபகரணம், நோட்டு, புத்தகங்கள் மற்றும் விளையாட்டு உபகரணங்களை வழங்கினார்.
இதுகுறித்து ஸ்கூல் நெட் இந்தியா நிறுவன கோவை மண்டல பொறுப்பாளர் பரத் கூறும்போது: ஸ்கூல் நெட் இந்தியா நிறுவனம் ஆந்திரா, மகாராஷ்டிரா மாநிலங்களில் கல்விக்கென பல்வேறு புராஜக்ட்களை செயல்படுத்தி வருவதாகவும் கோவை சின்னாம்பதி மலைவாழ் கிராம மாணவர்களுக்கு கல்விக்கான உபகரணங்களை வழங்கியுள்ளதன் மூலம் அவர்களுக்கான கல்வி தடையில்லாமல் கிடைக்கும் என்றார்.

மேலும், கோவையில் புதிதாக "டிஜிட்டல் மின்மினி விளக்கு" என்ற திட்டத்தை துவக்கியுள்ளதாகவும் இதன் மூலம் அம்மாணவர்களின் கல்வித்தரம் குறித்து மாத மாதம் தகவலறிக்கை சேகரித்து கண்காணிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் தென்னிந்திய பயிற்சி பொறுப்பாளர் அமிதாபானு, மலைவாழ் ஆசிரியரான சந்தியா, மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.
கோவை மாவட்டம் கேரள - தமிழக எல்லைப்பகுதி மாவுத்தம்பதி ஊராட்சிக்குட்பட்ட, சின்னாம்பதி பழங்குடியின கிராமத்தில், 80க்கும் மேற்பட்ட குடும்பங்களில் 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் 1 முதல் 8ம் வகுப்பு வரை படிக்கின்றனர்.
இணையதள வகுப்புகள் குறித்து என்ன என்று கேட்கும், இக்குழந்தைகளின் பெற்றோர்களுக்கு பெரிய வசதிகள் இல்லாததால் படிப்பை பாதியில் நிறுத்தியுள்ளனர்.
இந்நிலையில், கொரோனா ஊரடங்கும் அறிவிக்கப்பட்டதால், படிப்பு வாசனையே அறியாத அப்பெற்றோரின் குழந்தைகள், வீதி வீதியாக விளையாடியபடி, பொழுதை கழித்து வந்தனர். இக்குழந்தைகளை திரட்டி, தனது வீட்டையே பள்ளியாக மாற்றினார் அப்பகுதியின் முதல் பட்டதாரியான சந்தியா.
வாசித்தல், எழுதுதல், ஓவியம் வரைதல், கணக்கு போடுவது என ஒற்றை ஆளாக, தனது கிராம குழந்தைகளை வழிநடத்தி வந்தார். இது தொடர்பாக பல்வேறு செய்தி தொலைக்காட்சிகள், சமூக வளைதளங்கள் செய்தி வெளியிட்டு இருந்தன. இதனை அறிந்த "ஸ்கூல் நெட் இந்தியா" என்ற தனியார் நிறுவனம் சி.எஸ்.ஆர் நிதி மூலம் அம்மலைவாழ் மாணவர்களின் கல்வியை கருத்தில் கொண்டு சுமார் ரூ.3லட்சம் மதிப்பிலான கல்வி மற்றும் விளையாட்டு உபகரணங்களை வழங்கியுள்ளது.
சின்னாம்பதி கிராமத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட ஸ்கூல் நெட் இந்தியா நிறுவனத்தின் துணை தலைவர் ராஜேஷ் சோமன், கணிப்பொறி, ஆங்கிலம் பயில "English bolo software", மற்றும் மல்டிமீடியா உள்ளிட்ட காட்சி வாயிலாக பயிலும் விதமாக ஒருங்கிணைந்த k-yan உபகரணம், நோட்டு, புத்தகங்கள் மற்றும் விளையாட்டு உபகரணங்களை வழங்கினார்.
இதுகுறித்து ஸ்கூல் நெட் இந்தியா நிறுவன கோவை மண்டல பொறுப்பாளர் பரத் கூறும்போது: ஸ்கூல் நெட் இந்தியா நிறுவனம் ஆந்திரா, மகாராஷ்டிரா மாநிலங்களில் கல்விக்கென பல்வேறு புராஜக்ட்களை செயல்படுத்தி வருவதாகவும் கோவை சின்னாம்பதி மலைவாழ் கிராம மாணவர்களுக்கு கல்விக்கான உபகரணங்களை வழங்கியுள்ளதன் மூலம் அவர்களுக்கான கல்வி தடையில்லாமல் கிடைக்கும் என்றார்.
மேலும், கோவையில் புதிதாக "டிஜிட்டல் மின்மினி விளக்கு" என்ற திட்டத்தை துவக்கியுள்ளதாகவும் இதன் மூலம் அம்மாணவர்களின் கல்வித்தரம் குறித்து மாத மாதம் தகவலறிக்கை சேகரித்து கண்காணிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் தென்னிந்திய பயிற்சி பொறுப்பாளர் அமிதாபானு, மலைவாழ் ஆசிரியரான சந்தியா, மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.