மதுக்கரை பத்திரப்பதிவு அலுவலகத்தில் ஒரே நபர் பெயரில் 29-சொத்துக்கள் பதிவு.!!

கோவை: கோவை மதுக்காரை பத்திரப்பதிவு அலுவலகத்தில் ஒரே நபர் பெயரில் 29-சொத்துக்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளது.



கோவை: கோவை மதுக்கரை பத்திரப்பதிவு அலுவலகத்தில் ஒரே நபர் பெயரில் 29-சொத்துக்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

தமிழக முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணி வீடு உட்படத் தமிழகம் முழுவதிலும் உள்ள அவருடைய நிறுவனங்களில் லஞ்ச ஒழிப்பு காவல்துறை சோதனை செய்த அதே நாளில் கோவை மதுக்கரை பத்திரப்பதிவு அலுவலகத்தில் ஒரே நபர் பெயரில் 29-சொத்துக்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

அவர் வேலுமணியின் உறவினரா? என்பது குறித்து லஞ்ச ஒழிப்பு காவல்துறை விசாரணையைத் துவக்கி உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கோவை, முன்னாள் அமைச்சர் வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை நடந்த நாளில் மதுக்கரை சார்–பதிவாளர் அலுவலகத்தில், ஒரே நபரின் பெயரில் 29-பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கும் தகவல், சமூக ஊடகங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் வீடு, பண்ணை வீடு, அவருக்கு நெருக்கமான உறவினர்கள், நண்பர்களின் வீடுகள் மற்றும் நிறுவன அலுவலகங்களில், நேற்று முன்தினம் தமிழக லஞ்ச ஒழிப்பு காவல்துறை அதிரடி சோதனை நடத்தினர்.

இதில், 13 லட்சம் ரூபாய் ரொக்கம், சில ஆவணங்கள், போன்றவற்றை காவல்துறை கைப்பற்றிச் சென்றுள்ளனர். விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.

வேலுமணியின் உறவினர் மகாலிங்கம் என்பவர் பெயரில், ரெய்டு நடந்த நாளான நேற்று முன்தினம் ஆகஸ்ட் 10-ம் தேதி, மதுக்கரை சார்–பதிவாளர் அலுவலகத்தில், 29-பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நான்கு பத்திரங்கள் பிழை திருத்தப்பட்டுள்ளன என, சமூக வலைத்தளத்தில் சிலர் தகவல் பதிவிட்டு இருந்தனர்.

மதுக்கரை சார்–பதிவாளர் அலுவலகத்தில் விசாரித்தபோது, மகாலிங்கம் என்பவர் பெயரில் திருமலையாம் பாளையத்தில் உள்ள 29-மனையிடங்கள், அன்று ஒரே நாளில் பதிவு செய்யப்பட்டது உண்மை தான்.

ஒவ்வொரு மனையும் 3-அல்லது 4-சென்ட் அளவே இருக்கும். அதன் சந்தை மதிப்பும் மொத்தமாகச் சேர்த்தே 2-கோடி ரூபாய்க்கும் குறைவாகவே இருக்கும் என்றனர்.

ஆனால், பிழை திருத்தப்பட்ட நான்கு பத்திரங்களுக்கும், மகாலிங்கத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் தகவல் தெரிவித்தனர்.

மகாலிங்கம் என்பவர், வேலுமணியின் உறவினரா? இருவருக்குமான தொடர்பு என்ன, மகாலிங்கத்தின் வருவாய் பின்புலம் என்ன என்பது பற்றி, லஞ்ச ஒழிப்புத் துறை காவல்துறையும் விசாரணை மேற்கொள்வதாகத் தெரியவந்துள்ளது.

Newsletter

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...