கோவை: தேனி மாவட்டம் எல்லையில் உள்ள போடிமெட்டு சோதனை சாவடியில் 2 தவணை தடுப்பூசி செலுத்திய சான்றிதழ் இருந்தால் மட்டுமே கேரளாவுக்குள் அனுமதி வழங்கப்படும் என்று கெடுபிடி நீடிப்பதால் நூற்றுக்கணக்கான வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்துக்கிடக்கின்றன.
கோவை: தேனி மாவட்டம் எல்லையில் உள்ள போடிமெட்டு சோதனை சாவடியில் 2 தவணை தடுப்பூசி செலுத்திய சான்றிதழ் இருந்தால் மட்டுமே கேரளாவுக்குள் அனுமதி வழங்கப்படும் என்று கெடுபிடி நீடிப்பதால் நூற்றுக்கணக்கான வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்துக்கிடக்கின்றன.
கேரளாவில் கொரோனா தொற்று மீண்டும் வேகமாக பரவுவதால் ஒரு டோஸ் தடுப்பூசியாவது செலுத்தியோர் அம்மாநில எல்லைக்குள் அனுமதிக்கப்பட்டு வந்தனர்.
தேனி மாவட்டம் போடிமெட்டு, கம்பம்மெட்டு, குமிழி ஆகிய 3 வழித்தடங்களில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான கூலி தொழிலாளர்கள் கேரளாவின் இடுக்கி மாவட்டம் சென்று வேலை பார்த்து மாலையில் வீடு திரும்புவது வழக்கம்.
இந்த நிலையில், இன்று காலை திடீரென 2 தவணை தடுப்பூசி செலுத்தியிருந்தால் மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று சுகாதாரத்துறையினருக்கு கடுமையான கெடுபிடி செய்து தமிழ்நாட்டு வாகனங்களுக்கு அனுமதி மறுத்தனர்.
இதனால் போடிமெட்டு மலைச்சாலை அடிவாரத்தில் உள்ள முந்தைய சோதனை சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்துக்கிடக்கின்றன.
இதனால் தங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதற்கு இரண்டு மாநில போலீசார் மற்றும் சுகாதாரத்துறையினர் உரிய பேச்சுவார்த்தை நடத்தி சுமூகமான தீர்வு காண வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.