கேரளாவுக்குள் 2 தவணை தடுப்பூசி செலுத்திய சான்றிதழ் இருந்தால் மட்டுமே அனுமதி - போடிமெட்டு சோதனை சாவடியில் நீண்ட வரிசையில் நிற்கும் வாகனங்கள்!

கோவை: தேனி மாவட்டம் எல்லையில் உள்ள போடிமெட்டு சோதனை சாவடியில் 2 தவணை தடுப்பூசி செலுத்திய சான்றிதழ் இருந்தால் மட்டுமே கேரளாவுக்குள் அனுமதி வழங்கப்படும் என்று கெடுபிடி நீடிப்பதால் நூற்றுக்கணக்கான வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்துக்கிடக்கின்றன.



கோவை: தேனி மாவட்டம் எல்லையில் உள்ள போடிமெட்டு சோதனை சாவடியில் 2 தவணை தடுப்பூசி செலுத்திய சான்றிதழ் இருந்தால் மட்டுமே கேரளாவுக்குள் அனுமதி வழங்கப்படும் என்று கெடுபிடி நீடிப்பதால் நூற்றுக்கணக்கான வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்துக்கிடக்கின்றன.

கேரளாவில் கொரோனா தொற்று மீண்டும் வேகமாக பரவுவதால் ஒரு டோஸ் தடுப்பூசியாவது செலுத்தியோர் அம்மாநில எல்லைக்குள் அனுமதிக்கப்பட்டு வந்தனர்.

தேனி மாவட்டம் போடிமெட்டு, கம்பம்மெட்டு, குமிழி ஆகிய 3 வழித்தடங்களில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான கூலி தொழிலாளர்கள் கேரளாவின் இடுக்கி மாவட்டம் சென்று வேலை பார்த்து மாலையில் வீடு திரும்புவது வழக்கம்.

இந்த நிலையில், இன்று காலை திடீரென 2 தவணை தடுப்பூசி செலுத்தியிருந்தால் மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று சுகாதாரத்துறையினருக்கு கடுமையான கெடுபிடி செய்து தமிழ்நாட்டு வாகனங்களுக்கு அனுமதி மறுத்தனர்.

இதனால் போடிமெட்டு மலைச்சாலை அடிவாரத்தில் உள்ள முந்தைய சோதனை சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்துக்கிடக்கின்றன.

இதனால் தங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதற்கு இரண்டு மாநில போலீசார் மற்றும் சுகாதாரத்துறையினர் உரிய பேச்சுவார்த்தை நடத்தி சுமூகமான தீர்வு காண வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Newsletter

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...