திருப்பூர்: திருப்பூரில், மதுபானக் கூடங்களில் முறைகேடாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த, 3-ஆயிரத்து 500 -மதுபாட்டில்கள் பறிமுதல் செய்து மதுபானக் கூட உரிமையாளர்கள் உட்பட 6-பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருப்பூர்: திருப்பூரில், மதுபானக் கூடங்களில் முறைகேடாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த,3-ஆயிரத்து 500 -மதுபாட்டில்கள் பறிமுதல் செய்து மதுபானக் கூட உரிமையாளர்கள் உட்பட 6-பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தில், கொரோனா தொற்று பரவலை ஒட்டி புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அரசு மதுபானக் கடைகள் காலை 10-மணி முதல் மாலை 5-மணி வரை மட்டுமே இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பல்வேறு பகுதிகளிலும் 5-மணிக்கு மேல் விற்பனை செய்வதற்காக, மதுபாட்டில்கள் பதுக்கி விற்பனை நடைபெறுவதாக புகார் எழுந்தது. இதனையடுத்து திருப்பூர் மாவட்ட டாஸ்மாக் மேலாளர்சவுந்தரபாண்டியன், கலால் உதவி ஆணையர் சுகுமார் மற்றும் அனுப்பர்பாளையம் போலீஸார் பல்வேறு இடங்களில் ஆய்வு செய்தனர்.

அப்போது திருப்பூர் காந்திநகர் பகுதியில் எதிரெதிரே உள்ள இரண்டு மதுபானக் கூடங்கள் மற்றும் கூலிபாளையம் சாலை ஆகிய பகுதிகளில் ஆய்வில் பெட்டி, பெட்டியாக மதுபாட்டில்கள் பதுக்கி அதிக விலைக்கு விற்பதை போலீஸார் கண்டறிந்தனர்.
இதையடுத்து அங்கிருந்து ரூ.5 லட்சம் மதிப்பிலான சுமார் 3-ஆயிரத்து 500-மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக மதுபானக் கூட உரிமையாளர்கள் மகாலிங்கம், தனபால் மற்றும் அவர்களது மதுபானக் கூடத்தில் வேலை செய்த 4-பேர் என மொத்தம் 6-பேர் மீது, அனுப்பர்பாளையம் போலீஸார் வழக்கு பதிந்து கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்டத்தில், கொரோனா தொற்று பரவலை ஒட்டி புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அரசு மதுபானக் கடைகள் காலை 10-மணி முதல் மாலை 5-மணி வரை மட்டுமே இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பல்வேறு பகுதிகளிலும் 5-மணிக்கு மேல் விற்பனை செய்வதற்காக, மதுபாட்டில்கள் பதுக்கி விற்பனை நடைபெறுவதாக புகார் எழுந்தது. இதனையடுத்து திருப்பூர் மாவட்ட டாஸ்மாக் மேலாளர்சவுந்தரபாண்டியன், கலால் உதவி ஆணையர் சுகுமார் மற்றும் அனுப்பர்பாளையம் போலீஸார் பல்வேறு இடங்களில் ஆய்வு செய்தனர்.
அப்போது திருப்பூர் காந்திநகர் பகுதியில் எதிரெதிரே உள்ள இரண்டு மதுபானக் கூடங்கள் மற்றும் கூலிபாளையம் சாலை ஆகிய பகுதிகளில் ஆய்வில் பெட்டி, பெட்டியாக மதுபாட்டில்கள் பதுக்கி அதிக விலைக்கு விற்பதை போலீஸார் கண்டறிந்தனர்.
இதையடுத்து அங்கிருந்து ரூ.5 லட்சம் மதிப்பிலான சுமார் 3-ஆயிரத்து 500-மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக மதுபானக் கூட உரிமையாளர்கள் மகாலிங்கம், தனபால் மற்றும் அவர்களது மதுபானக் கூடத்தில் வேலை செய்த 4-பேர் என மொத்தம் 6-பேர் மீது, அனுப்பர்பாளையம் போலீஸார் வழக்கு பதிந்து கைது செய்தனர்.